
மொத்த மக்கள் தொகையில் ஒரு சதவீதத்தினர் தீவிர மனநோயினாலும், 10 முதல் 15 சதவீதத்தினர் மற்ற நோய்களினாலும், பள்ளி குழந்தைகள் மன அழுத்த நோயாலும் பாதிக்கப்படுகின்றனர் என மனநல ஆராய்ச்சியில் கணக்கிடப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் ஏற்படும் நட்பு, காதல் அதில் ஏற்படும் ஏமாற்றம் போன்றவைகளை தாங்கி கொள்ள முடியாமலும், யாரிடமும் கூறாமல் மனதுக்குள்ளேயே வைப்பதால் மனஅழுத்த நோய்க்கு ஆளாகின்றனர்.
இதனால் அவர்களது கல்வி தரம் பாதிக்கும் நிலை உருவாகி வருகிறது.
இதை தவிர்க்க பள்ளி குழந்தைகளுக்கு நல்லொழுக்கம் வகுப்புகள் நடத்தியது போல், மனநல திட்டம் குறித்த வகுப்புகள் விரைவில் பள்ளிகள் தோறும் துவங்கப்பட உள்ளன.
இது தொடர்பாக முதற்கட்டமாக பள்ளி ஆசிரியர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் மனநல திட்டம் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக