
நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பிறகு, முதன் முறையாக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தொல். திருமாவளவன் இன்று மாலை 7 மணியளவிற்கு பரங்கிப்பேட்டை நகருக்கு வருகைபுரிந்தார். அப்போது பெய்த மழையையும் பொருட்படுத்தாது சஞ்சீவிராயர் முனையில் தனது நன்றிகளை வாக்காளர்களுக்கு தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து வீதி வீதியாக சென்று பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். திறந்த வேனில் பேரூராட்சி மன்ற தலைவர் முஹமது யூனுஸூம் உடன் சென்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக