செவ்வாய், 15 பிப்ரவரி, 2011
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையினர் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இணைச் செயலர் செல்வராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சதீஷ்குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.இணைச் செயலர்கள் சீனுவாசன், இப்ராஹிம், மக்கள் நலப் பணியாளர் சங்கத் தலைவர் ராஜவேல், ஊராட்சி உதவியாளர் சங்கத் தலைவர் மதியழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக