செவ்வாய், 15 பிப்ரவரி, 2011
இஸ்லாமிய பெண்களுக்கான மார்க்க விழிப்புணர்வு கூட்டம்
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை மஹ்மூதியா ஷாதி மஹாலில் இஸ்லாமிய பெண்களுக்கான மார்க்க விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. ஹெச். லியாகத் அலி தலைமையிலும் எம். ஜெய்னுல்லாபுதீன் முன்னிலையிலும் நடைபெற்ற இக்கூட்டத்தில் மண்ணறை வாழ்க்கை என்கிற தலைப்பில் கோவை ஜாக்கிரும், நபித்தோழர்களின் வாழ்க்கை வரலாறு என்கிற தலைப்பில் திருச்சியை சார்ந்த மீரான் மெய்தீனும் சிறப்புரையாற்றினார்கள்.


பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சிக்கு ஆண்களுக்கும் தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. இதில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முஹமது யூனுஸ் மற்றும் மீராப்பள்ளி நிர்வாகிகள் உட்பட ஆண்களும் பெண்களும் பலர் வருகை புரிந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
நறுமணங்களின் முகவரிப் பூக்கள் என்பார்கள். நறுமணம் தரும் உயர்தர பூக்களிலிருந்து, சாதாரணப் பூக்கள் வரை அனைத்து பூக்களும் காலையில் பூத்து மாலை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக