இன்று காலை வெளியான 10ம் வகுப்பு தேர்வில் எந்த முறையும் இல்லாத அளவிற்கு முதல் ராங்கை 5 பேர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் மாணவிகளே. மொத்தம் 496 மார்க்குகள் பெற்றுள்ளனர்.இதில் மொத்தம் தேர்வு எழுதியதில் 7 லட்சத்து 1ஆயிரத்து 786 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் தேர்ச்சி விகிதம் 85. 30 சதம் ஆகும். இதில் மாணவர்கள் 82. 30 சதம், மாணவிகள் 88.10 சதம் ஆகும். பரங்கிப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் செய்யது ராபியா பிவீ 479 மதிப்பெண்களும், தீபா 470 மதிப்பெண்களும், நூர் சுல்தானா 463 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். மாணவிகள் தீபா, செய்யது ராபியா பீவி ஆகிய இருவரும் கணக்கு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விவரங்கள் இறைவன் நாடினால் விரைவில்.
5 கருத்துரைகள்!:
வெற்றிப் பெற்ற மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மேலும் கல்வியில் முன்னேற பிரார்த்திக்கிறோம்.
ஏழு லட்சத்தி ஒன்னாயிறத்தி புதிய தமிழ் சொற்றொடரை அறிமுகப்படுத்திய சகோ அப்பாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
இத்தனை விரைவாக தகவல்கள் (வழக்கம் போல்) அளிக்கும் mypno விற்கு ஓர் "ஓ"
பள்ளிகள் தோறும் தேருதல் சதவிகிதம் வெளிட்டால் நன்றாக இருக்கும்
வழிப்போக்கன்
வெற்றி பெற்ற அனைத்து மாணவ மாணவியருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக