காங்கிரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காங்கிரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 மார்ச், 2011

மூ.மு.க., வேட்பாளர் மீது பரங்கிப்பேட்டை இளைஞர் காங்.,கினர் அதிருப்தி

பரங்கிப்பேட்டை : சிதம்பரம் தொகுதி மூ.மு.க., வேட்பாளர் மீது பரங்கிப்பேட்டை இளைஞர் காங்., கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.

தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம் தொகுதி வேட்பாளராக மூ.மு.க., தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் போட்டியிடுகிறார்.

பரங்கிப்பேட்டை பகுதிகளில் உள்ள தி.மு.க., - பா.ம.க., - வி.சி., கட்சி நிர்வாகிகளை மட்டும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். காங்., கட்சி நிர்வாகிகளை சந்திக்கவில்லை.

இதனால் இளைஞர் காங்., கட்சியினர் அதிருப்தியில் தேர்தல் பணி செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து பரங்கிப்பேட்டை இளைஞர் காங்., தலைவர் செய்யது அலி அகில இந்திய பொதுச்செயலர் ராகுல் மற்றும் மாநில இளைஞர் காங்., தலைவர் யுவராஜிக்கு பேக்ஸ் அனுப்பியுள்ளார்.

Source: Dinamalar

ஞாயிறு, 13 மார்ச், 2011

சிதம்பரம் எங்களுக்குத்தான்: காங்., நிர்வாகிகள் நம்பிக்கை

சிதம்பரம் சட்டசபை தொகுதியை காங்., பெற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 1951, 57, 62, 67 மற்றும் 1991ம் ஆண்டு தேர்தலில் காங்., சிதம்பரம் தொகுதியை தக்க வைத்திருந்தது. 96ம் ஆண்டு நடந்த தேர்தலில் த.மா.கா., வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்று வந்தனர்.

2011ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் சிதம்பரம் தொகுதியை தி.மு.க., கூட்டணியில் இருக்கும் காங்., கட்சியினர் பெற தீவிர முயற்சி மேற்கொண்டு கடந்த மாதம் முதல் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னையில் முகாமிட்டனர். தற்போது சிதம்பரம் மற்றும் வாசன் ஆதரவாளர்கள் சிதம்பரம் தொகுதியை பெற மீண்டும் தீவிர முயற்சியில் உள்ளனர்.

Source: Dinamalar