கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 3 ஜூன், 2009

T-10 கிரிக்கெட் போட்டி நிறைவு பெற்றது!

கடந்த ஒருவார காலமாக கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் சார்பாக நடைபெற்ற T-10 கிரிக்கெட் போட்டி நிறைவு பெற்றது.

இதில் சுமார் 32 டீம்கல் கலந்து கொண்டது.

அதில் முதல் பரிசை பெற்ற அணி Tiger-A அணியினர்.

போட்டி நிறைவு விழாவில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் ஹாஜி M.S.முஹமது யூனிஸ், ஜமாத் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

திங்கள், 25 மே, 2009

கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் நடத்திய முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி


வெள்ளிக்கிழமை (22.05.2009) காலை சரியாக 8.30 மணிக்கு SS நகர் மைதானத்தில் கிரசன்ட் நல்வாழ்வு சங்கம் நடத்தும் முதலாம் ஆண்டு T-10 கிரிக்கெட் போட்டி துவங்கியது.

இப்போட்டியை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் M.S.முஹமது யூனிஸ் அவர்கள் துவக்கி வைத்தார்.

ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதன்பின் நடந்த முதல் போட்டியில் F.C.C Vs 11 boys அணியினர் மோதினர்.

அதில் F.C.C. அணியினர் வெற்றி பெற்றனர்.

Source: CWO

புதன், 20 மே, 2009

மாநில அளவிலான கிரிக்கெட் கடலூரில் 30ம் தேதி துவக்கம்

மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 30ம் தேதி துவங்குகிறது.

கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம், காஸ்மாபாலிடன் கிரிக்கெட் கிளப், மாவட்ட கிரிக்கெட் அகாடமி சார்பில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடக்கிறது.

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 30ம் தேதி துவங்கும் போட்டிக்கு மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்குகிறார்.

போட்டியில் பங்கேற்கும் அணிகள் வரும் 24ம் தேதிக்குள் பெயர், நுழைவுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

விவரங்களுக்கு கூத்தரசன், மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர், எண் 5, ஜட்ஜ் பங்களா ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர் என்ற முகவரியிலும், 98423 09909, 98941 16565, 94425 21780 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

திங்கள், 18 மே, 2009

கோடைகால கிரிக்கெட் போட்டி

கோடைகால கிரிக்கெட் போட்டி வாத்திய பள்ளியில் நடை பெறுகிறது.
மேலதிக செய்திகளுக்கும், புகைப்படங்களுக்கும்....

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் 11ம் தேதி கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு வரும் 11ம் தேதி நடக்கிறது.

மாவட்ட 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தேர்வு கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் வரும் 11ம் தேதி நடக்கிறது.

காலை 9 மணிக்கு 14 வயதிற்குட்பட்ட வீரர்கள் தேர்வும், 1 மணிக்கு 16 வயதிற்குட்பட்ட வீரர்கள் தேர்வும் நடக்கிறது.

தேர்வில் கலந்து கொள்ளும் வீரர்கள் வெள்ளை சீருடை அணிந்து வர வேண்டும்.

14 வயதிற்குட்பட்டோர் 95ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அல்லது அதன் பிறகும், 16 வயதிற்குட்பட்டோர் 93ம் ஆண்டு செப்டம்பர் 1ம் தேதி அல்லது அதன் பிறகு பிறந்திருக்க வேண்டும்.

தேர்விற்கு வருவோர் கடலூர் மாவட்டத்தில் பிறந்தவராகவோ அல்லது மாவட்டத்திற்குள் படிப்பவராகவோ இருக்க வேண்டும்.

இரண்டு போட்டோ, பிறப்பு சான்றிதழ் கொண்டு வரவேண்டும்.

வீரர்கள் தேர்வு மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமையில் செயலாளர் கூத்தரசன், இணை செயலாளர்கள் சத்தியமூர்த்தி, நடராஜன் முன்னிலையில் நடக்கிறது.

மேலும் விவரங்களுக்கு... மாவட்ட கிரிக்கெட் சங்கம்-5, ஜட்ஜ் பங்களா ரோடு, மஞ்சக்குப்பம், கடலூர் என்ற முகவரியிலும், 9842309909, 9894116565, 9442521780 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளவும்.