கடலூர் மாவட்டத்தில் குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.
திங்கள், 18 மே, 2009
இலங்கையில் விடுதலைப்புலிகள் சுற்றி வளைப்பு கடலூரில் தீவிர கண்காணிப்பு!
கடலூர் மாவட்டத்தில் குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.
ஞாயிறு, 12 ஏப்ரல், 2009
விடுதலைப்புலிகள் ஊடுருவலா? பரங்கிப்பேட்டை, கடலூர் கடற்கரை கிராமங்களில் கியூ பிராஞ்ச் போலீஸ் சோதனை
தமிழகத்தில் அகதிகள் பெயரில் விடுதலைப்புலிகள் ஊடுருவ இருப்பதாக மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் கடலோரத்தில் உள்ள 13 மாவட்டங்களில் தீவிர சோதனை நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து இந்த மாவட்டங்களில் கடலோர காவல் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடலோர சோதனை சாவடிகளான வல்லம்படுகை, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், ரெட்டிச்சாவடி, ஆலப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் கடலோர காவல்
படை தீவிர சோதனை நடத்தி வருகிறது.
இது தவிர கடற்கரையோர கிராமங்களில் கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்ட கடற்கரை கிராமங்களான தேவனாம்பட்டினம், சிங்காரதோப்பு, அக்கரை கோரி, ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, பரங்கிப்பேட்டை, கிள்ளை, எம்.ஜி.ஆர். திட்டு, முழுக்கு துறை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, தைக்கால் தோணித்துறை ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்தது.
மேலும் விருத்தாசலம் குள்ளஞ்சாவடி, அம்பலவாணன் பேட்டை, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார் கோவில் ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களிலும் கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Source : மாலை மலர்
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...