வியாழன், 26 ஜூன், 2008

பரங்கிப்பேட்டையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தொலைபேசி ஓயர்கள் திருட்டு: 2 பேர் கைது

பரங்கிப்பேட்டையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள தொலை பேசி ஒயர்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பி.எஸ். என்.எல். தொலை பேசி நிலையத்தில் ஏராளமான தொலை பேசி காப்பர் ஒயர்கள் திருடு போய் வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் குமர கோவில் தெருவை சேர்ந்த செல்லையா (வயது 40) என்பவர் தொலைபேசி நிலை யத்திற்குள் புகுந்து ஒயர் களை திருடினார்.

இதனை அங்கு காவ லாளியாக இருந்த மகிழ்நாதன் பார்த்து கையும், களவுமாக அவரைÛ பிடித்தார். பின்னர் செல்லையா போலீசில் ஒப்படைக் கப்பட்டார். இது பற்றி உதவி பொறியாளர் முகமது உஸ்மான் பரங்கிப்பேட்டை போலீ சில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம பாண்டியன் வழக்குப்பதிவு செய்து செல்லையாவிடம் விசாரணை செய்தார்.

விசாரணையில், செல்லையா 200 கிலோ தொலைபேசி ஒயர்களை திருடி ,அதை சிதம்பரத்தில் உள்ள இரும்பு கடைக்காரர் சையது மூசாவிடம் விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டார். அதன் பேரில் போலீசார் செல் லையா, சையது மூசா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ஒயர்கள் கைப்பற்றப் பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

திங்கள், 23 ஜூன், 2008

லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா


பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப்பின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று மாலை 7 மணிக்கு அண்ணாமலைப் பல்கலைகழகத்தின் கடல்வாழ் உயிரின ஆராய்சி மையத்தில் நடைபெற்றது. இதில் புதிய நிர்வாகிகள் பதவியேற்றதுடன், ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட் புத்தகங்கள் வழங்கப்பட்டது. மேலும் லயன்ஸ் கிளப்பின் புதிய செயல் திட்டங்களும் அறிவுப்பு செய்யப்பட்டது.

புதிய நிர்வாகிகள் விபரம்:
தலைவர் : எம். கவுஸ் ஹமீது (ராஜா)
செயளாளர் : எம்.எஸ. சுல்தான் சேட்டு
பொருளாளர் : எம். இராதாகிருஷ்ணன்
து. தலைவர்கள் : ஓ.ஏ.டபிள்யூ. பாவாஜான், பி.அருள்வாசகம், கே. அரசு
து. செயளாளர்: டி. ஜெயராமன்

ஞாயிறு, 22 ஜூன், 2008

மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா



பரங்கிப்பேட்டை ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ) மற்றும் பரங்கிப்பேட்டை தவ்ஹீத் ஜமாஅத் (PTJ), ஜித்தா இணைந்து மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சியை இன்று மஹ்மூதியா ஷாதி மஹாலில் நடத்தினர்.

ITJ-ன் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் மவ்லவி ஸதக்கத்துல்லா உமரி மற்றும் ஆலிமா சுமையா மாண-மாணவிகளுக்கு பரிசளித்து சிறப்புரை ஆற்றினார்கள். இந்நிகழச்சியில் மாவட்டத் தலைவர் கலிமுல்லாஹ் உட்பட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.