சனி, 27 டிசம்பர், 2008
பரங்கிப்பேட்டையில் இண்டெர்நெட் மற்றும் வங்கி சேவைகள் பாதிப்பு
குமரக் கோயில் தெருவில் இயங்கி வந்த பி.எஸ்.என்.எல். எக்ஸ்ச்சேஞ் அலுவலகம் சந்தை தோப்பு அருகில் உள்ள அதன் சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு வருகிறது. இதனால் பி.எஸ்.என்.எல்லின் பிராட்பேண்ட் சேவை கடந்த 6 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ஏ.டி.ஏம். சேவை மட்டுமின்றி அதன் மற்ற சேவைகளும் பரங்கிப்பேட்டையில் நேற்றுவரை தடைபெற்றிருந்தது. அவசரநிலை கருதி வங்கி சேவைக்கு மட்டும் இண்டர்நெட் வசதியை நேற்று வழங்கப்பட்டது. ஆனால் வங்கி தவிர்த்து மற்ற யாருக்கும் இணைப்பை தராமல் இன்று, நாளை என்று மாற்றி மாற்றி கூறுவதால் அதன் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அலுவலகம் மற்றும் இணைப்பு கட்டிடம் மாற்று பணி நடைபெறுகிறது. இந்த சிரமத்தை நாங்களும் உணர்கிறோம். இன்று மாலைக்குள் எல்லா பிரச்சினையும் சரிசெய்யப்பட்டு வழக்கமான சேவைகள் தொடரும் என்று கூறினர்.
வெள்ளி, 26 டிசம்பர், 2008
சுனாமிகள் பல வகை....
2004 டிசம்பர் 26 காலை மனித இன வரலாற்றில் மிகப்பெரும் பேரழிவினை பதிவு செய்தது சுனாமி என்ற ஆழிப்பேரலை. கிட்டத்தட்ட இரண்டரை லட்ச மக்கள் பலியாக, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை திசைமாற்றிய சுனாமி, இன்றளவும் பயவிழிகளுடன்தான் கவனிக்கப்படுகிறது.
பூகம்ப அதிர்வுகளால் சற்றே தளும்பிய மகா சமுத்திரத்திற்கு, பாதுகாப்பாக இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கும் நமது வீடுகளையும், உடமைகளையும், உயிர்களையும் விழுங்கி திரும்புவதற்கு சில மில்லிமீட்டர் அளவு வித்தியாசங்கள் போதும்.
காலங்காலமாய் ஒரு சாகசக்கதை அளவிற்கு பேசப்படப்போகும் இந்த பேரழிவின் மூலம் அந்த கடலையும், நம்மையும் படைத்த இறைவன் விடுத்த செய்தியினைப்பற்றி நம்மில் எத்தனை பேர் யோசித்திருப்போம்? பேசியிருப்போம்? மீண்டும் பிச்சையிடப்பட்ட நமது உயிரையும், வாழ்க்கையையும் வைத்துக்கொண்டு நாம் என்னதான் செய்து கொண்டு உள்ளோம் ?
சில நாட்கள் முன்பு அமெரிக்க லேமென் பிரதர்ஸ் திவால் எனும் பூகம்பத்தால் பரவிய மெல்ட் டவுன் சுனாமி பீதி, நமதூர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் முன் நூற்றுக்கணக்கானவர்களை குவித்தது. அன்றும் அதற்க்கடுத்த நாளும் நமதூர் மக்களால் சுமார் 13 கோடிரூபாய்க்கும் மேல் அந்த வங்கியிலிருந்து எடுக்கப்பட்டது தெரியவந்தது. ஓபன் சீக்ரட் ஆன இந்த விஷயத்திலும் நாம் கற்று கொள்ள விஷயம் உள்ளது.

வங்கி பயனாளர்களில் எத்தனை பேர் முஸ்லிம்கள், அவர்கள் எவ்வளவு ஜகாத் கொடுத்திருப்பார்கள் என்பதையெல்லாம் நமக்கு தெரிந்த ஊர் கணக்கை வைத்து probablityக்கு ( நிகழ்தகவு) தீனியாக போட்டுவிட்டு பார்த்தால் ...... 13 கோடி வேண்டாம்... 10 கோடிக்கு இரண்டரை சதவிகிதம் ஜகாத் ஒரு வருடத்திற்கு என்றால் 5 வருட முடிவில் யாருமே ஜகாத் வாங்க தேவையற்ற நிலைதானே உருவாகி இருக்க வேண்டும்.?
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி திவால் என்று ஒரே ஒரு பிங்க் ஸிலிப் தனக்கு தானே கொடுத்துக்கொண்டிருந்தால் (மஞ்சள் நோட்டிஸ்) மொத்த பணமும் காந்தி கணக்கில்தானே போயிருக்கும். தன்னுடைய நிலையாமையை அழகாக காட்டிய, - தப்பிபிழைத்த அந்த பணம்- நம்முடைய பணமே என்றாலும் அதில் ஏழைகளுக்கு சேரவேண்டியதாக இறைவன் நிர்ணயித்திருப்பதை கொடுத்திருந்தால் அது தானே நிலையானதாக இருந்திருக்கும்....
நம்மை இல்லாமலேயே செய்திருக்கூடிய சுனாமி....

நம்மை இல்லாமலேயே செய்திருக்கூடிய சுனாமி....நாம் இருந்தும் இல்லாமல் ஆக்கியிருக்ககூடிய இன்னொரு சுனாமி
என்று சுனாமிகள் பலவகையாக இருந்தாலும் படிப்பினைகள் எப்போதும் ஒன்றுதான்.
புதன், 24 டிசம்பர், 2008
இதுவரை நாம்....!
இறைவனுக்கே எல்லாப் புகழும் பெருமையும் ! الحمد لله
அன்பிற்கினிய நேயர்களே! நேற்றுதான் தொடங்கியது போல இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத சிறகுகளோடு காலம் பறந்துகொண்டிருக்கிறது. வெற்றிகரமான முதலாம் ஆண்டுடன் 250ஆம் பதிவையும் நிறைவு செய்கிறோம். 50,000த்தை நெருங்கும் 'நோக்கு'கள்(Hits).
இறையருள் முன்னிற்க, நல்லெண்ண சகோதரர்களாகிய உங்களின் ஆதரவும் அரவணைப்பும் மறக்க இயலாதது.
MYPNO என்கிற இவ்வலைப்பக்கத்தை அதன் பொருளுக்கேற்ப 'என்னுடைய பரங்கிப்பேட்டை' என்றே அனைவரும் உணர்ந்து வந்திருக்கிறீர்கள். நன்றி!
ஊர்ச்செய்திகளுக்கான அர்ப்பணிப்புடனும் தனித்தன்மையுடனும் ஒளிவீசும் இவ்வலைதளத்தில் உடனுக்குடனும், சார்புகளற்றும், விருப்புவெறுப்புகளற்றும், செய்திகளை செய்திகளாகவே தருவதற்கு எங்களால் இயன்ற எல்லாமுயற்சிகளையும் எடுத்துவந்திருக்கிறோம்.
மனிதர்கள் என்பதால் எங்களிலும் பிழைகள் இருக்கலாம்.பிழை மட்டுமே இயல்பு என்றில்லாமல் திருத்திக்கொள்வதே அழகு என்பதையும் உணர்ந்தே இருக்கிறோம்.
ஓர் இனிய நற்செய்தியாக, இன்ஷாஅல்லாஹ் மிக விரைவில் நாம் வலைப்பூவை தொடர்ந்து சொந்தமாக mypno.com என்கிற சொந்த வலைமனைக்கே குடியேற இருக்கிறோம் என்பதை இத்தருணத்தில் மிக மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதிலே, மிகப்பல புதிய பகுதிகள் உங்களின் இரசனைக்கும், சிந்தனைக்கும் விருந்தாய் அமைய உழைக்கிற அதேநேரத்தில்,சமூக அவலங்களுக்கான மருந்தாகவும் எங்கள் மெய்நிகர்களஉழைப்பு (Virtual FieldWork) இடம் பெறவேண்டும் என்பதிலே ஆர்வமும், நேர்மையுங் கொண்டுள்ளோம்.
புதியதாக மலர இருக்கிற நம்முடைய mypno.com/ வலைமனையில், இடம் பெறத் தக்கவை என்று நீங்கள் கருதுகிற சீர்திருத்தங்களையும், நேர்கருத்துகளையும் mypnonews@gmail.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சலில் தரும்படி வாசகர்களாகிய உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். (தயவுசெய்து பின்னூட்டமாகத் தெரிவிக்க வேண்டாம், அப்படியும் பின்னூட்ட விரும்பினால் அதில் உங்களின் முழுமுகவரியை அளித்தால் மகிழுவோம்).
எதிர்பார்ப்புகளற்ற எங்களின் உழைப்பும் அதன் பயனும் தேக்கமடையாதிருக்க உங்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும், ஊக்கப்பூர்வமான கருத்துகளும், பிரார்த்தனைகளும் நிறையவும் நிறைவாகவும் வேண்டும்,வேண்டும்,வேண்டும்.
.......and miles to go before WE sleep!جزاك الله خيرا
உங்களின் சேவையில்
MYPNO வலைத்தளக் குழு.
அன்பிற்கினிய நேயர்களே! நேற்றுதான் தொடங்கியது போல இருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத சிறகுகளோடு காலம் பறந்துகொண்டிருக்கிறது. வெற்றிகரமான முதலாம் ஆண்டுடன் 250ஆம் பதிவையும் நிறைவு செய்கிறோம். 50,000த்தை நெருங்கும் 'நோக்கு'கள்(Hits).
இறையருள் முன்னிற்க, நல்லெண்ண சகோதரர்களாகிய உங்களின் ஆதரவும் அரவணைப்பும் மறக்க இயலாதது.
MYPNO என்கிற இவ்வலைப்பக்கத்தை அதன் பொருளுக்கேற்ப 'என்னுடைய பரங்கிப்பேட்டை' என்றே அனைவரும் உணர்ந்து வந்திருக்கிறீர்கள். நன்றி!
ஊர்ச்செய்திகளுக்கான அர்ப்பணிப்புடனும் தனித்தன்மையுடனும் ஒளிவீசும் இவ்வலைதளத்தில் உடனுக்குடனும், சார்புகளற்றும், விருப்புவெறுப்புகளற்றும், செய்திகளை செய்திகளாகவே தருவதற்கு எங்களால் இயன்ற எல்லாமுயற்சிகளையும் எடுத்துவந்திருக்கிறோம்.
மனிதர்கள் என்பதால் எங்களிலும் பிழைகள் இருக்கலாம்.பிழை மட்டுமே இயல்பு என்றில்லாமல் திருத்திக்கொள்வதே அழகு என்பதையும் உணர்ந்தே இருக்கிறோம்.
ஓர் இனிய நற்செய்தியாக, இன்ஷாஅல்லாஹ் மிக விரைவில் நாம் வலைப்பூவை தொடர்ந்து சொந்தமாக mypno.com என்கிற சொந்த வலைமனைக்கே குடியேற இருக்கிறோம் என்பதை இத்தருணத்தில் மிக மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அதிலே, மிகப்பல புதிய பகுதிகள் உங்களின் இரசனைக்கும், சிந்தனைக்கும் விருந்தாய் அமைய உழைக்கிற அதேநேரத்தில்,சமூக அவலங்களுக்கான மருந்தாகவும் எங்கள் மெய்நிகர்களஉழைப்பு (Virtual FieldWork) இடம் பெறவேண்டும் என்பதிலே ஆர்வமும், நேர்மையுங் கொண்டுள்ளோம்.
புதியதாக மலர இருக்கிற நம்முடைய mypno.com/ வலைமனையில், இடம் பெறத் தக்கவை என்று நீங்கள் கருதுகிற சீர்திருத்தங்களையும், நேர்கருத்துகளையும் mypnonews@gmail.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சலில் தரும்படி வாசகர்களாகிய உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். (தயவுசெய்து பின்னூட்டமாகத் தெரிவிக்க வேண்டாம், அப்படியும் பின்னூட்ட விரும்பினால் அதில் உங்களின் முழுமுகவரியை அளித்தால் மகிழுவோம்).
எதிர்பார்ப்புகளற்ற எங்களின் உழைப்பும் அதன் பயனும் தேக்கமடையாதிருக்க உங்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளும், ஊக்கப்பூர்வமான கருத்துகளும், பிரார்த்தனைகளும் நிறையவும் நிறைவாகவும் வேண்டும்,வேண்டும்,வேண்டும்.
.......and miles to go before WE sleep!جزاك الله خيرا
உங்களின் சேவையில்
MYPNO வலைத்தளக் குழு.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...