வியாழன், 1 ஜனவரி, 2009

புத்தாண்டும் பரங்கிப்பேட்டையும்

ஜனவரி 1 - ஆங்கில புதிய ஆண்டு பிறப்பு என்றிருந்தாலும், இதை ஏதோ ஒரு வழியில் கொண்டாட்டமாகவே வெகுஜன மக்கள் எண்ணுகிற வேளையில், சில ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இது கொண்டாட்டமாக ஆர்கெஸ்ட்ரா, வீதி உலாக்கள் என்று நீண்டிருந்தது. புத்தாண்டு முதல் நாளே, அதாவது அன்று இரவே (NewYear Eve) இதன் அடையாளங்கள் தெரிந்துவிடும்.

ஆனால் இந்த புதிய ஆண்டிற்கு, எவ்வித அடையாளமும் காணப்படாமல் இருந்தது. சஞ்சீவிராயர் முனையில் மட்டும் (முன்னால்) மியான் கடையில் லேசான அலங்கார விளக்கோடு Happy New Year என்கிற வாழ்த்து வாசகத்தோடு கூட்டமே இன்றி, இரவு 12 மணி வரை வெறிச்சோடியே காணப்பட்டது.

01-01-2009; 00:00 சரியாக துவங்கியவுடன் ஊரின் பக்கவாட்டுகளிலிருந்து பக்காவாக ஒலித்தது வெடியும் வேட்டு சத்தங்களும். பல்ஸரும், அப்பாச்சிகளும் சரக்-புரக் என்று சிமெண்ட் சாலைகளில் இனம்புரியாத ஓசைகளை எழுப்பியவாறு சோழாவரம் ரேஸ் ஒன்றை நடத்திவிட்டு சென்றது.

அதன் பிறகு மியான் கடையில் டீ விற்பனையும் சூடு பிடித்துக்கொண்டது.
இதனிடையே நள்ளிரவு 2 மணி வரை ஊரின் பல முக்கிய வீதிகளில் இளைஞர் பட்டாளம் ஒன்று கார் ஒன்றில் அதன் உள்ளேயும் மேற்கூரையிலும் உட்கார்ந்தவாறு அதிரடி இசை முழங்க, கைத்தட்டல்கள் மற்றும் வெடிகளை வெடித்தவாறு தூக்கத்தில் இருந்தவர்களை அதிர்ச்சியூட்டிவிட்டு சென்றது.

இவர்களை புகைபடமெடுக்க முயன்ற தருணத்தில் சுதாகரித்து கொண்டு எஸ்கேப் ஆகிவிட்டது.

இன்று முதல் MYPNO இணையதள சோதனைச் சேவை

இறையருளால், அவன் நன்னாட்டபடி, இன்று முதல் http://www.mypno.com/ இணையதள சோதனைச் சேவை உங்களுக்காக!


அன்பு வாகசர்களே! இந்த இணையதள சேவையை உங்களுக்காக கடந்த ஹஜ் பெருநாள், முஹர்ரம் 1 ஆகிய இரு தினங்களில் முழுமையான சேவையுடன் வழங்க நாங்கள் திட்டமிட்டோம். ஆனால் சில இடர்கள் இதனை ஒத்திவைக்க நேரிட்டது. முக்கியமாக.... பரங்கிப்பேட்டையில் BSNL அலுவலகம் இடம் மாற்றும் வேலைகளால் இன்றுவரை இண்டெர்நெட் சேவை கிடைக்கவில்லை.


ஆதலால், சிரமங்களுக்கிடையே.... இவ்வலைதளச் சேவையை சோதனைச் சேவையாக வழங்குகிறோம்.


இதில் உள்ள நிறை-குறைகளை எங்களுக்கு உடனே மின்னஞ்சல் செய்யுங்கள். இந்த இணையத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளுங்கள்.
வெளிநாட்டுவாழ் வாசகர்களே! உங்கள் பகுதிகளில் நடக்கும் செய்திகளையும்; தகவல்களையும் தொகுத்து அனுப்புங்கள். அவை இன்ஷாஅல்லாஹ்... NRI பக்கத்தில் பிரசுரிக்கப்படும்.

இன்னும் சில.... தினங்களில் அனைத்து தகவல்களையும் தாங்கி...... முழுமையான இணையமாக உங்களுக்காக... மிக விரைவில், இன்ஷாஅல்லாஹ்.

நன்றிகள் பல.
-MYPNO குழு

செவ்வாய், 30 டிசம்பர், 2008

தொடர்ந்து அலட்சியம் செய்கிறது பரங்கிப்பேட்டை பி.எஸ்.என்.எல்.

அலுவலகத்தை இடம் மாற்றுகிறோம் என்கிற பெயரில் ஊர் முழுதும் Broadband இண்டெர்நெட் சேவையை கிட்டதட்ட 10 நாட்களாக நிறுத்தி வைத்திருக்கிறது பரங்கிப்பேட்டை பி.எஸ்.என்.எல். இன்று, இதோ, இப்போது வந்துவிடும் என தினமும் அதன் சந்தாதாரர்களை அலட்சியம் செய்து வருகிறது. இதனால் இந்த BSNL Broadband மூலம் இண்டெர்நெட் பயன்படுத்துவோர் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர்.