திங்கள், 5 ஜனவரி, 2009

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம்

பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் செயற்குழு கூட்டம் நேற்று 04.01.2009 ஞாயிறு அன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு மஹ்மதியா ஓரியன்டல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வழக்கம் போல் இல்லாமல் நிறைய எண்ணிக்கையிலான செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கிரீன் பாஸ் ஹோல்டர்களான வெளிநாட்டு வாழ் சகோதரர்கள் வந்திருந்தனர்.

கடந்த மூன்றாண்டுகளாக (யூனுஸ் நானா தலைமையில் இது 9 ஆண்டுகள்) செயல்பட்டுவந்த ஜமாஅத்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவடைவதால் இந்த ஜமாஅத்திற்கு இது கடைசி செயற்குழுவாகும். இந்த வருடத்திற்க்கான கணக்கு ஜனாப் ஆடிட்டர் இலியாஸ் நானா அவர்களால் வாசித்துக்காண்பிக்கப்பட்டு உறுப்பினர்களால் சிற்சில கேள்விகளுடன் ஏற்கப்பட்டது.

அடுத்து இது இந்த ஜமாஅத்திற்கு கடைசி செயற்குழுவாக இருப்பதால் தலைவர் எழுந்து தனக்கு ஒத்துழைப்பளித்த அனைவருக்கும், நிர்வாககுழு, செயற்குழு, வெளிநாடு வாழ் அமைப்பினர் மற்றும் சகோதரர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார். கணக்கு வழக்குகளில் எந்த சிறு தெளிவு தேவைப்பட்டாலும், எந்த நேரத்திலும் ஜமாஅத்தில் வந்து தெளிவுசெய்துக்கொள்ளும்படியும், கணக்கு வழக்கு மட்டுமல்லாமல், எந்த விட­யமானாலும் நேரில் கேட்கலாம் எனவும் தயவு செய்து பின்னால் பேசுவதை தவிர்க்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

பிறகு, ஜமாஅத்தின் பைலாவில் விதிமுறை எண் 9 ல் (தேர்தல்) சில மாற்றங்கள் (ஜமாஅத் தலைவராக போட்டியிடுபவர் போஸ்டர், ஆட்டோ, நோட்டிஸ் விளம்பரம் மற்றும் தனிநபர் தாக்குதலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும், தனிப்பட்ட முறையில் மக்களை சந்தித்து மட்டுமே ஆதரவு தேட வேண்டும், வெளிநாடு வாழ் சகோதரர்களுக்கு வாக்கு வழங்க இணையத்தின் (வெப் கேமரா) மூலம் வசதி போன்றவை) முன்வைக்கப்பட்டு ஏற்கப்பட்டது.

பிறகு, அடுத்த ஜமாஅத்தினை எங்ஙணம் தேர்ந்தெடுப்பது என்பது குறித்த விவாதம் துவங்கியது.
வெளிநாடு வாழ் சகோதரரான ஜனாப். ஜுல்பிகாதர் அலி தேர்ந்தெடுக்கப்படும் தலைவர் தனது நிர்வாகத்தை தானே தேர்வு செய்யும் தற்போதைய முறை மாறி நிர்வாகிகளும் பொதுமக்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற தனது கருத்தை முன்வைத்தார். இதற்கு பிறகு பல விதமான கருத்து பரிமாறல்கள் நடைபெற்றன. இதுவிட­யமாகவும் தேர்தல் எப்படி, என்று, எப்போது என்பது குறித்து ஒரு கருத்து எட்டப்படாததால் மக்ரிபு தொழுகைக்கு பிறகும் கூட்டம் தொடர்ந்தது.பிறகு, தேர்தலை செயல்படுத்தும் அதிகாரிகள் 5 பேரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது.

பிறகு இலக்கின்றி நீண்ட வாத விவாதங்களுக்கு பிறகு ஜமாஅத் தலைவர் தனது நிர்வாகிகளை தானே தேர்ந்தெடுப்பதா அல்லது பொதுமக்களா என்ற விடயத்திற்கு முடிவு இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18 .01. 2009 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பொதுக்குழுவில் தீர்மானத்திற்கு விடப்படும் என்கிற தீர்மானங்கள் ஏற்பிற்கு பிறகு இஷா தொழுகை க்கு வெகு நேரம் கழித்தே கூட்டம் நிறைவுற்றது.

நாம் செய்ய வேண்டியது ஒன்று பாக்கியுள்ளது. அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள நமது கட்டமைப்பு எனும் மிகப்பெரும் அருட்கொடை இறைவனும் அவனது தூதரும் காட்டித்தந்த வழியின்படி மேம்பட்டு சிறக்கவும் அதில் ஷைத்தான் தனது வேலையை காட்டிவிடாமல் இருக்கவும் மனம் உருகி இறைவனிடம் பிரார்த்தனை செய்வதுதான் அது.

ஞாயிறு, 4 ஜனவரி, 2009

இந்தியா: கைபேசி சேவைக்கட்டணங்கள் 30% குறைகிறது.

சனிக்கிழமை, 03 ஜனவரி 2009 18:55


மொபைல் போன் நிறுவனங்களிடம் வசூலிக்கும் கட்டணத்தை கணிசமாகக் குறைக்க தொலைத் தொடர்பு ஆணையமான 'டிராய்' முடிவு செய்துள்ளது.

இதனால், மொபைல் போன் சேவை கட்டணங்கள் 30 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது.

தொலைபேசி நிறுவனங்களைக் கட்டுப்படுத்தும் அமைப்பு மத்திய அரசின் 'டிராய்'.

மொபைல் இணைப்பு வழங்க மொபைல் நிறுவனங்களுக்கு சில கட்டணங்களை விதித்துள்ளது. அதாவது பிஎஸ்என்எல், மொபைல் போனில் இருந்து ஒரு அழைப்பு, வேறு ஒரு நிறுவன மொபைல் போன் இணைப்புக்கு போகிறதென்றால், பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் இருந்து 'கால் டெர்மினேஷன்' கட்டணமாக ஒரு அழைப்புக்கு 30 பைசாவை 'டிராய்' வசூலித்து வருகிறது.

இந்த கட்டணத்தான் இப்போது 13 பைசாவாகக் குறைக்க முடிவு செய்துள்ளது.

இந்த வகையில், உள்ளூர் போன் பேச ஒரு மொபைல் சந்தாதாரர் நிமிடத்துக்கு ஒரு ரூபாய் கட்டணம் செலுத்துகிறார் என்றால், அவர் இந்த கட்டண குறைப்பால் 80 பைசா செலவழித்தால் போதும்.

இதுபோல, தொலைதூர மெபைல் சேவைக்கும் கட்டணத்தை 'டிராய்' குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்த கட்டணம் 'கேரேஜ்' கட்டணம் என்று அழைக்கப்படுகிறது.

இதை 65 பைசாவில் இருந்து 16 பைசாவாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் முதல் இந்தக் கட்டணக் குறைப்புகள் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. சாதாரண தொலைபேசிக்கான கட்டணத்தையும் கணிசமாகக் குறைக்கவிருப்பதாக தொலைத் தொடர்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி: தட்ஸ்தமிழ்.

சனி, 3 ஜனவரி, 2009

இறப்புச் செய்தி

நாட்டான் கிணற்று முடுக்கில் மர்ஹீம் முஹம்மத் சித்திக் அவர்களின் மகனாரும், மர்ஹீம் ஹக்கீம், முத்து நானா அவர்களின் மருமகனாரும் S.உதுமான் அலி அவர்களின் தம்பியும், கவுஸ் ஹமீது, சாகுல், முத்து ராஜா இவர்களின் தகப்பனாருமாகிய S.முஸ்தபா மர்ஹீம் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 4:00 மணி அளவில் நல்லடக்கம் வாத்தியாபள்ளயில்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.