வியாழன், 15 ஜனவரி, 2009

பரங்கிபேட்டையில் ஒரு நீயா நானா நிகழ்ச்சி

நமது மாணவர்களின் கல்வி தரத்தை பற்றிய கவலை நாளுக்கு நாள் ஆழமாகி கொண்டே செல்கிறது. அட்வைஸ் என்ற பெயரில் அல்லாமல் வித்தியாசமான ஒரு நிகழ்ச்சி மூலம் அவர்களின் நிலை உணர்த்தி அவர்களை ஊக்கபடுத்திடவும், கவனிக்க வேண்டிய முக்கிய குழுவாக உள்ள ஆசிரியர்களும் பெற்றோர்களும் அதில் சேர்த்து கொள்ளவும் கல்விக்குழு முடிவு செய்தது.

விஜய் டிவியில் நடைபெறும் ஆரோக்கியமான நிகழ்ச்சியான நீயா நானா போன்று ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களை மேடையில் அமர்த்தி அவர்களுக்கிடையேயான கலந்துரையாடலை நிகழ்ச்சியாக வழங்க தீர்மானித்துள்ளது.


இன்ஷா அல்லாஹ், வருகிற 17.01.9 சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஷாதி மஹாலில் நிகழ்ச்சி நடைபெறும்.


இஸ்லாமிய ஐக்கிய் ஜமாஅத் மற்றும் பேருராட்சி மன்ற தலைவர் முஹம்மத் யூனுஸ் அவர்கள் தலைமை தாங்க, ஐந்து பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள் முன்னிலை வகிக்க அண்ணாமலை பல்கலைகழக கடல் வாழ உயிரின ஆராச்சி மையத்தின் பேராசிரியர் டாக்டர் கே.கதிரேசன் அவர்களும் கலிமா பள்ளியின் தாளாளர் ஜனாப். ஐ. இஸ்மாயில் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக இருப்பதாக நிகழ்ச்சி அமையும். குவைத் பரங்கிபேட்டை இஸ்லாமிய பேரவை தலைவர் ஜனாப். அ. பா. கலீல் அஹ்மத் பாகவீ அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி தர உள்ளார்.


காலை 9 மணிக்கு முன் வரும் முதல் நூறு மாணவர்களுக்கு நுழைவு பரிசு உண்டு.

பல்வேறு சிந்தனையுடைய ஆசிரியர்களும், மாணவர்களும், பெற்றோர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் கருத்தை பதிக்க இப்போதே ஆர்வமாக பெயர் கொடுத்து உள்ளனர்.


உங்களில் யாரேனும் மற்றும் வெளிநாடு வாழ சகோதரர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் தங்கள் பிள்ளைகள் இந்த ஆரோக்கியமான வித்தியாசமான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பினால் உடனே கல்விகுழுவை தொடர்பு கொள்ளுங்கள். (9894321527, 9894838845, 9994106594) அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறது கல்விக்குழு.

நல்லவை எதுவும் நடப்பதில்லை என்று நாம் குறைபட்டுகொள்வது வழக்கம். நல்லது ஒன்று நடக்கும் போது அதில் பங்களிக்காமல் இருப்பதின் மூலம் அப்படி குறைசொல்வதற்கான தார்மீக தகுதியை இழந்தவர்களாக நாம் ஆகவேண்டாமே...

புதன், 14 ஜனவரி, 2009

ஹாஜிகள் வருகை

கடந்த ஆண்டு இறுதியில் 29/11/08 அன்று புனித ஹஜ் பயணம் சென்று இருந்த 25 ஹஜ்ஜாஜிகளும் அல்லாஹ்வின் கிருபையால் புனித ஹஜ் பயணத்தை முடித்து கொண்டு இன்று காலை சரியாக 9.00 மணி அளவில் ஜாமியா மஸ்ஜித் மீராப்பள்ளி வந்து அடைந்தனர்,இவர்களை வரவேற்க ஏராளமான ஊர் மக்கள் மீராபள்ளியில் திரண்டு வந்து ஹாஜிகளை ஆரத்தழுவி முலாகத் செய்து கொண்டனர்.
தகவல் நன்றி : irfan ahamed, CWO

செல்வியின் செவ்வி! - MYPNO Exclusive!


புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. செல்வி இராமஜெயம் அவர்கள் MYPNO.COM இணையத்திற்கு பிரத்யேகமாக அளித்த சிறப்பு பேட்டி.... இன்னும் ஒரு சில தினங்களில்.