ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய்யா பல்கலை அட்மிஷன் அறிவிப்பு

ஜாமிஆ மில்லியா இஸ்லாமிய்யா பல்கலைக்கழகம் (JMI) 2009-10ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை அறிவித்துள்ளது.

இப்பல்கலைக்கழகம் 32 துறைகளின் கீழ் 205 படிப்புகளையும், 12 ஆராய்ச்சி படிப்புகளையும் வழங்குகிறது. இப்படிப்புகள் அனைத்திற்கும் அட்மிஷன் துவங்கியுள்ளது. மாணவர்களுக்கு வினியோகிப்பதற்காகவே 1.10 லட்சம் விண்ணப்பம் மற்றும் விளக்க உரைகளை அச்சடித்துள்ளது.

பிஎச்.டி., (PhD) தவிர மற்ற அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு நடத்தப்படும். இந்த எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும்.

மே முதல் வாரத்திற்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். எம்.எஸ்சி. (MSc), எலக்ட்ரானிக்ஸ், பி.டெக். (B.Tech), மற்றும் இன்ஜினியரிங் சார்ந்த டிப்ளமோ படிப்புகளுக்கு அதற்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பம் மற்றும் விபரங்களுக்கு http://www.jmi.nic.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

முஸ்லிம் மாணவர்களும் போட்டித் தேர்வுகளும்





நன்றி: சமரசம் மாதமிருமுறை இதழ் http://www.samarasam.net/16-31_Mar_09/index.htm

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

10 வயது மாணவி தற்கொலை? விளையாட்டு விணையானது.

பரங்கிப்பேட்டை வானுவர் தெருவில் வசிக்கும் பூபதி என்பவரின் மகள் ஸ்வேதா (வயது 10). சாக்ரடீஸ் நர்ஸரி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த இம்மாணவி நேற்று இரவு தன்னுடைய வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினாள். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவத்தினால் இம்மாணவியின் பெற்றோர் உட்பட அப்பகுதி மக்களும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.


படிப்பில் முதல் மதிப்பெண் பெற்று அறிவாற்றல் நிறைந்த மாணவியாக திகழ்ந்த ஸ்வேதாவின் தற்கொலை எப்படி நிகழ்ந்தது? என்ன காரணத்திற்காக தூக்கு போட்டு கொண்டாள் என்று விசாரித்ததில் தன் சகோதரனுடன் விளையாட்டாக செய்து காண்பித்திருக்கிறாள். 'பார்! நான் தூக்குப் போட்டுவிட்டு 5 நிமிடம் கழித்து உன்னுடன் மறுபடியும் பேசுவேன்' என்று. கட்டில் மீது சிறிய நாற்காலி போட்டு துப்பட்டாவால் (ஷால்) ஃபேனில் தூக்கு போட்டு விளையாட்டாக செய்ததின் விளைவாக கடைசியில் இறந்தே போய்விட்டாள்.

எல்லையற்ற துன்பத்தில் ஆழ்திருக்கும் இவளது பெற்றோர் அளவிலாத துக்கத்தில் இருக்கின்றனர். இது குறித்து சாக்ரடீஸ் பள்ளியின் தாளாளர் அர்ஜூனனை தொடர்பு கொண்டு கேட்டபோது, "தொடர்ந்து எங்கள் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்து வந்தாள். இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த குளோபல் வார்மிங் விழிப்புணர்வு ஓவியப் போட்டியில் (13 பள்ளிகள் பங்குபெற்ற) முதல் பரிசு பெற்றவள். இவளுடைய இழப்பு எங்களை மிகவும் பாதித்துள்ளது" என்று கூறினார்.

இது குறித்து சமூக ஆர்வளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், 'இதற்கெல்லாம் காரணம் சீரியல் - சினிமா போன்றவைதான். பிள்ளைகளை வைத்துக் கொண்டு பெற்றோர்கள் டி.வி. பார்ப்பதை தவிர்க்க வேண்டும். சீரியலில் காட்டப்படும் விபரீதங்களை பார்த்து இன்றைய பிள்ளைகள் மனதளவில் மிகவும் பாதிக்கப்டுகின்றார்கள் என்றார்.