திங்கள், 6 ஏப்ரல், 2009

பரங்கிப்பேட்டையில் கோஷ்டி மோதல்; 5 பேர் கைது

பரங்கிப்பேட்டையில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடும்ப பிரச்சினை

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் நாகூரான். இவரது மனைவி பிரேமா (வயது 26). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவி பிரேமாவை அடித்தார். அவர் அடிக்கு பயந்து போன பிரேமா பக்கத்து வீட்டை சேர்ந்த குப்புராஜ் வீட்டுக்குள் சென்றார்.

இதை பார்த்த நாகூரான், குப்புராஜிடம் தனது மனைவியை வெளியே அனுப்புமாறு கூறினார். அதையடுத்து 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதை அந்த வழியாக வந்த கார்மேகம் தட்டிக் கேட்டார்.

இதில் ஆத்திரமடைந்த நாகூரான், அவருக்கு ஆதரவாக சுரேஷ், நடேசன், கண்ணன் ஆகிய 4 பேரும் சேர்ந்து கார்மேகத்தை தாக்கியதாக தெரிகிறது. உடன் குப்புராஜ், கார்மேகம், அஞ்சப்பன் ஆகிய 3 பேரும் சேர்ந்து பதிலுக்கு கண்ணனை சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் கண்ணன், கார்மேகம் ஆகிய 2 பேரும் காயமடைந்தனர்.

இது பற்றி கார்மேகம் மனைவி கமலாவும், கண்ணனும் பரங்கிப்பேட்டை போலீசில் தனித்தனியே புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ராதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சுரேஷ், நாகூரான், நடேசன், கார்மேகம், அஞ்சப்பன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டையில் சுவர் விளம்பரங்கள் அழிப்பு - சமூக நல பாதுகாப்பு தாசில்தார் நடவடிக்கை

பரங்கிப்பேட்டையில் அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்ட சுவர் விளம்பரங்கள் சமூக நல பாதுகாப்பு தாசில்தார் உத்தரவின்பேரில் அழிக்கப் பட்டன.

டிஜிட்டல் பேனர்கள்

பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் கமிஷன் உத்தரவின்படி சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சியினர் வைத்துள்ள சுவர் விளம்பரங்கள், டிஜிட்டல் பேனர்கள், கட்அவுட்டுகள் ஆகியவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதன்படி பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சுவர் விளம்பரங்கள் உள்ளதா என்று கண்டறிய நேற்று முன்தினம் சமூக நல பாதுகாப்பு தாசில்தார் அசோகன் பரங்கிப்பேட்டைக்கு வந்தார்.

ஆய்வு

அதையடுத்து அவர் பரங்கிப்பேட்டை பேரூராட்சி முழுவதும் அரசியல் சம்பந்தப்பட்ட சுவர் விளம்பரங்கள், டிஜிட்டல் பேனர்கள் உள்ளதா என்று ஆய்வு செய்தார். அப்போது அகரம் பகுதியில் சுவர் விளம்பரம் இருந்தது. அதேபோல் பரங்கிப்பேட்டை தெத்துக்கடை தெருவில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்களும் இருந்தது. அதை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

மேலும் பரங்கிப்பேட்டையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தீவிர சோதனை செய்யப்பட்டது. அவருடன் பேரூராட்சி செயல் அதிகாரி சேவியர் அமுல்தாஸ், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் உடன் சென்றனர்.

ஞாயிறு, 5 ஏப்ரல், 2009

இந்திய ஆட்சிப் பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

சென்னையில் இயங்கி வரும் மனித நேயம் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் இலவச பயிற்சி மையம் இந்திய ஆட்சிப் பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சியை வழங்கி வருகிறது. தகுதியுடையோர் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Manidha Naeyam IAS & IPS Free Coaching Centre

#28, 1st Main Road,
C I T Nagar,
Chennai – 600 035.
Phone: 044-2435 8373.
Cell: 9940670110, 9840106162.
web: http://manidhanaeyam.com/about_us.html


A candidate must send the filled in application for either by post or in person with the following enclosed copies
  1. Three passport size photographs,

  2. 10th Mark sheet.

  3. Community Certificate

  4. Degree Certificate or Provisional Certificate.

  5. 3 self addressed envelops
On or before the last date announced by the management, to the above address.

Courses offered by the Academy

1. Free Coaching for Civil Services Preliminary Examinations

  1. Duration: 8 Months

  2. Optional Offered: 1. Indian History, 2. Public Adminitration, 3. Geography, 4. Veterinary Science and Animal Husbandry, 5. Sociology, 6. Commerce

  3. Commencement: August Last week

2. Free Coaching for Civil Services Main Examinations

  • Optional Subjects: 1. Indian History, 2. Public Administration, 3. Geography, 4. Thamizh Literature
3. Free Coaching for Interview Test for Civil Services


4. Free Coaching for TNPSC Group -1 Main Examinations
  • Durations: 1 and half months

http://manidhanaeyam.com