சனி, 20 நவம்பர், 2010

கண் தானம்

பரங்கிப்பேட்டை காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிவகாமி அம்மாள் (76) புதன்கிழமை காலமானார். இவரது கண்கள் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் அரிமா சங்கத் தலைவர் பெரி.முருகப்பன், பரங்கிப்பேட்டை அரிமா சங்கத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்தனர்.


நன்றி: தினமணி

வெள்ளி, 19 நவம்பர், 2010

இறப்புச் செய்தி

பரங்கிப்பேட்டை தெத்துக்கடை தெருவில் மர்ஹூம் முஹம்மது அலி கான் அவர்களின் மகனாரும், ரசூல் கான், சுலைமான் கான், சாதாத் கான் ஆகியோர்களின் சகோதரரும், கஃப்பார் அலி கான், பிஸ்மில்லாஹ் கான், ஹபீபுல்லாஹ் கான் ஆகியோர்களின் தகப்பனாரும், பேரூராட்சி மன்ற உறுப்பினருமான அபா கான் என்கின்ற முஹம்மது கான் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை 10.00 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்