ஞாயிறு, 7 டிசம்பர், 2008

புதுப்பள்ளி நிர்வாகத்தில் புதிய மாற்றம் வருமா?

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக எந்தவித நிர்வாக மாற்றத்தையும் கண்டிராத புதுப்பள்ளி நிர்வாகத்திற்கு வரும் 19-ந்தேதி தேர்தல் என்று வக்ஃப் வாரியம் அறிவித்துள்ளது. இதனிடையே இதுகுறித்து இன்று சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல விசயங்கள் ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, வரும் தேர்தலில் கீழ்கண்டவர்களை புதிய நிர்வாகம் அமையப்படவேண்டும் என்று முக்கிய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முத்தவல்லியாக..... கும்மத்பள்ளி நஜீர் அஹமது
செயலாளராக ......... A. அப்துல் மாலிக்
பொருளாளராக........ அப்துல் காதிர் உமரி

19-ந்தேதி இவர்களை கொண்டு புதிய நிர்வாகம் அமையுமா என்பது பொருத்திருந்து பார்ப்போம்.

சனி, 6 டிசம்பர், 2008

ஆட்டிறைச்சி கடும் விலை உயர்வு


இந்திய சந்தையில் விலையேற்றத்திற்கு பெயர் போன பெட்ரோல்-டீசல் விலை சற்று குறைந்துள்ள நிலையில், பரங்கிப்பேட்டையில் தற்போது ஆட்டிறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது சின்னகடை மார்க்கெட்டில் இறைச்சி கிலோ 220 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஹஜ் பெருநாள் நெருங்கிக் கொண்டிருப்பதினால் ஆட்டு கிடாவுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்ட பாதிப்பினால் போக்குவரத்து சற்று தடைபட்டதும் ஒரு காரணமாய் அமைந்திருக்கிறது.

பாம்பு.. பாம்பு....

இன்று மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு மீராபள்ளி கபறுஸ்தான் அருகில் சுமார் ஐந்து அடி நீளமுள்ள மிக தடிமனான நல்ல பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது.
( பாம்பு கடித்தால் தான் நியூஸ் அதை அடித்தால் என்ன நியூஸ் என்று இந்த பதிவுக்கு ஒரு கமண்ட்டை எதிர்பார்ப்போம். )