புதன், 24 ஜூன், 2009

காலி சிலிண்டர்களை ஏற்றி சென்ற மினி லாரி தலைகுப்புற கவிழ்ந்தது

பரங்கிப்பேட்டை அருகே சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற மினிலாரி தலை குப்புற கவிழ்ந்தது.

மயிலாடுதுறையில் இருந்து புதுச்சேரிக்கு 50 ஆக்சிஜன் காலி சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு ஒரு மினிலாரி நேற்று புறப்பட்டுச் சென்றது.

பரங்கிப்பேட்டை அடுத்த சின்னகுமட்டி அருகே நேற்று காலை 8.30 மணியளவில் மினிலாரி முன்னாள் சென்ற பஸ்சை முந்திச் செல்ல முயன்றது.

அப்போது திடீரென எதிர்புறத்தில் பஸ் வந்ததால் டிரைவர் பிரேக் போட்டதால் மினிலாரி நிலைதடுமாறி சாலையோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார்.

லாரியில் இருந்த சிலிண்டர்கள் சாலையில் சிதறி ஓடியதால் அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.

சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர்.

நடை பாதையில் நடமாடும் வியாபாரிகள்


கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு போக்கு வரத்து நெரிச்சலை சமாளிபதர்காகவும் மக்கள் இடையூர் இன்றி நடபதர்க்காகவும் பரங்கிபேட்டை சந்சிவீராயர் கோவில் தெருவில் நடைபாதை அமைக்கப்பட்டது.

தற்போது அங்கு பல கடை, சர்பத் கடை, பாணிபுரி கடை மற்றும் இது போன்ற அன்றாட கடைகள் அவிடத்தை ஆக்கிரமிச்சி விட்டனர்.


பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், வேளைக்கு செல்பவர்கள் மற்றும் பலர் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர்.


பேரூராச்சி மன்றம் நடவடிக்கை எடுக்குமா என்று பொருத்து இருந்து பார்ப்போம்!

நன்றி: கிரசண்ட நல்வாழ்வு சங்கம்

செவ்வாய், 23 ஜூன், 2009

பரங்கிப்பேட்டை படகு குழாம் பாதையில் பழுது

பரங்கிப்பேட்டை வரலாற்று சிறப்பம்சங்கள் நிறைந்த பகுதி என்ற நிலை மாறி தற்போது தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தளமாகவும் உருவெடுத்து வருகிறது.

ஹாஜி எம்.எஸ். முஹம்மது யூனுஸ் அவர்கள் தலைமையின் கீழ் செயல்படும் பரங்கிப்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் இதற்காக பல நடவடிக்கைகளை எடுத்து வருவது பாராட்டுக்குரியதாகும்.

வங்க கடலிலிருந்து பிரிந்து நகரின் ஓரத்தில் அழகாக ஓடிக்கொண்டிருக்கும் வெள்ளாற்றை படகு குழாமாக ஏற்படுத்தியதும் அதில் ஒன்று.

இந்த படகு குழாம் பகுதிக்கு பரங்கிப்பேட்டை மட்டுமில்லாமல் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட பொது மக்கள் பலரும் நூற்றுக்கணக்கில் தினந்தோறும் வந்து போகும் பொழுது போக்கு தளமாக மாறியுள்ளது.

இந்த படகு குழாம் பகுதியில் ஆற்றின் மத்திய பகுதி வரை மரப்பலகைகள் அமைத்து பாதை போடப்பட்டுள்ளது மக்களுக்கு வசதியாக உள்ளது.

அப்படி அமைந்துள்ள மரப்பலகை பாதையில் சில தினங்களுக்கு முன் ஓட்டை ஏற்பட்டு அங்கு நடந்து செல்லும் மக்கள் எந்நேரத்திலும் தடுக்கி விழ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அப்படி ஆபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

பரங்கிப்பேட்டை படகு குழாமிலிருந்து நமது செய்தியாளர்