திங்கள், 29 நவம்பர், 2010

இறப்புச் செய்தி

கவுஸ் பள்ளி தெருவில், மர்ஹூம் சாஹிப் மரைக்காயர் அவர்களின் மகனாரும், உஸ்மான் , ஹாஜா கமால், முஸ்தபா கமால், பஷீர் அஹமது ஆகியோர்களின் சகோதரரும், மர்ஹும் சையத் தாஜுதீன் சாஹிப், இப்ராஹிம் மரைக்காயர் அவர்களின் மைத்துனருமான ஜியாவுதீன் அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்றிரவு 9 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

தமிழக மேல் சபை தேர்தல்..(M.L.C)

தமிழக மேல் சபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆகிய இரண்டு பிரிவில் உள்ளவர்கள் வாக்களிக்க முடியும்.

வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதை ஒரு வேலையாக நினைத்து விட்டு விடவேண்டாம். இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலை கழகத்தில் 2007-ல் பட்ட படிப்பு முடித்தவர்கள் மற்றும் 2007-க்கு முன்பாக பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பகுதி நேரம் (Part Time) மற்றும் தொலைதூர கல்வியில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்

எங்கு விண்ணப்பிப்பது?

மாநகராட்சி பகுதிகளில் : மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்

பிற பகுதிகளில் : வட்டாட்சியர் அலுவலகங்கள்

எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பங்கள் விணியோகிப்படும் மையங்களில் படிவம் 18 விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்யலாம் http://www.elections.tn.gov.in/tnmlc.html இந்த இணையத்தில் உள்ள படிவத்தை Download செய்து சான்றிதழ்களுடன் தபால் மூலமும் விண்ணப்பிகளாம்.

உடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்

கீழ்காணும் சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை விண்ணப்ப படிவத்துடன் சமர்பிக்க வேண்டும்.

1.பட்ட சான்றிதழ் (Degree Certificate or provisional Certificate )

2. மதிப்பெண் சான்றிதழ்,

3. கல்லூரி முதல்வர் அல்லது துறை தலைவர் (Deen) கையொப்பமிட்ட சான்றிதழ்

3. அரசு துறையில் வேலைசெய்தால் அந்த துறையில் பெறப்பட்ட சான்றிதழ்.

மூல சான்றிதழை (ஒரிஜினல் சர்டிபிகேட்) சமர்பிக்க வேண்டாம்.ஆனால்
(மூல சான்றிதழை உடன் கொண்டுச்செல்லவேண்டும்)
சான்றிதழை நகல் (Zerox copy) எடுத்து அரசுக் கல்லூரி முதல்வர், நகராட்சி கமிஷனர், யூனியன் பி.டி.ஓ., தாசில்தார்கள் இதில் ஒருவரிடம் கையொப்பம் வாங்கி சமர்பித்தால் போதும்.

மேலும் விபரங்கள் மாநகராட்சி / வட்டாட்சியர் அலுவலகங்களில் கிடைக்கும் அல்லது இந்த இணையத்திலும் http://www.elections.tn.gov.in/tnmlc.htmlதெரிந்துகொள்ளலாம்.

சனி, 27 நவம்பர், 2010

இடியோசை

பரங்கிப்பேட்டை நகரில் இடியோசை - மின்னல்கள் ஏதும் இல்லாமல் தொடர்ந்து பலத்த மழை மட்டும் பெய்து வந்த சூழலில் நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் இடித்த இடியானது தெத்துக்கடை பகுதியிலுள்ள மின்மாற்றியினை தாக்கியதில் அப்பகுதியில் மின்வினியோகம் தடைப்பட்டுள்ளது. மேலும் தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு மின்னனு சாதனங்கள் பழுதாகி இருக்கின்றது. இன்று காலை முதல் பழுது நீக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கமான பராமரிப்பு பணிகளுக்காக காலை முதல் மாலை வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்திருந்தும், நகரில் மின்வினியோகம் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.