பரங்கிப்பேட்டையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொண்டு நிறுவனம் மூலம் கட்டப்பட்ட குடியிருப்புகள் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. பரங்கிப்பேட்டை கருணாநிதி சாலை கடந்த சுனாமியின்போது கடுமையாக பாதிக்கப்பட்டது. பாதிக்கப் பட்டவர்களுக்கு அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட 63 பேருக்கு புதுச்சத்திரம் பிளஸ் தொண்டு சார்பில் ரூ. தலா ரூ. ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நிரந்தர குடியிருப்புகள் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் தற்போது சுமார் 29 குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பாதியளவு வேலைகள் முடிந்துள்ளது. பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இன்னும் ஆரம்ப கட்ட வேலைக்கூட நடைபெறாமல் உள்ளது. இந்நிலையில் புதியதாக கட்டி முடிக்கப்பட்ட 29 குடியிருப்புகளில் 5க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதுகுறித்து சம்மந்தப் பட்ட தொண்டு நிறுவனம் மற்றும் அதிகாரிகளிடம் குடியிருப்புக்கு சொந்தமானவர்கள் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகின்றனர்.
நன்றி :- தின மலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ்...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
Inna lillahi wa inna ilaihi raajioon
பதிலளிநீக்கு