அக்டோபர்- டிசம்பர்  காலாண்டுக்கான மின் நுகர்வோர் குறைகேட்கும் கூட்டம் 29-ம் தேதி விழுப்புரத்தில்  நடைபெறும் என்று, கடலூர் மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் சி.மு. ரவிராம்  அறிவித்து உள்ளார். அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை  மாவட்டங்களை உள்ளடக்கிய, விழுப்புரம் மண்டலத்துக்கான நுகர்வோர் குழுக்களின்  மின்வாரிய குறைகேட்கும் கூட்டம் 29-ம் தேதி காலை 11 மணிக்கு, விழுப்புரம் மின்  வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும்.
 விழுப்புரம் மண்டல மின் வாரிய  தலைமைப் பொறியாளர் இக்கூட்டத்துக்கு தலைமை வகிக்கிறார்.
 கடலூர் மாவட்ட மின் நுகர்வோர் மின் துறை தொடர்பான மனுக்கள் ஏதேனும்  இருந்தால், கடலூர் மேற்பார்வைப் பொறியாளருக்கு அனுப்புமாறும், மின் நுகர்வோர்  குறைகேட்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம் என்றும் செய்திக்  குறிப்பில் கூறியுள்ளார்.
 Source: Dinamani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக