திங்கள், 27 டிசம்பர், 2010

கண் தானம்

பரங்கிப்பேட்டை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த விநோதம் அம்மாள் (97) வியாழக்கிழமை காலமானார். இவரது கண்கள் புவனகிரி அரிமா சங்கம் சார்பில் தானமாக பெறப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அரிமா சங்கத் தலைவர் கே. அமர்சந்த் சர்மா, நுகர்வோர் குறைத் தீர்ப்பு மன்ற சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் குணசேகரன், தன்னார்வ ரத்ததானக் கழகத் தலைவர் எஸ். ராமச்சந்திரன், நெய்வேலி ரத்தக் கொடையாளர் சங்க நிர்வாகி ஒய். ராஜா சிதம்பரம் உள்ளிட்டோர் செய்தனர்.

Source: Dinamani

1 கருத்து:

  1. கண் தானம் செய்தவரின் பெயர் விநோதம் அம்மாள்,
    பெயரே ஒரு விநோதமாகதான் இருக்கு

    பதிலளிநீக்கு