இன்ஜினியரிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இன்ஜினியரிங் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 4 மே, 2009

டி.ஆர்.டி.ஓ., நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணிவாய்ப்புகள்

மத்திய அரசு நிறுவனமான பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகம் (டி.ஆர்.டி.ஓ / DRDO).

டி.ஆர்.டி.ஒ., நமது பாதுகாப்பு குறித்த ஆய்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனம்.

இதன் மையங்கள் நாட்டின் குறிப்பிட்ட இடங்களில் இயங்கி வருகின்றன.

இதில் காலியாகவுள்ள பின்வரும் இன்ஜினியரிங் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்த விபரங்கள் இங்கே தரப்படுகின்றன.

பணியின் பெயர்: சயின்டிஸ்ட் பி

காலியிடங்கள்:மொத்தம் 220.

பிரிவு வாரியாக காலியிடங்கள்:

  • எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்ஸ் - 80
  • மெக்கானிக்கல் - 60
  • கம்ப்யூட்டர் சயின்ஸ் - 40
  • கெமிக்கல் - 20
  • எலக்ட்ரிகல் - 20

தகுதிகள்:

  • குறைந்தது 60 சதவீதத்துடன் மேலே குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் ஒன்றில் பி.இ., பி.டெக்., தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.

  • ஜூன் 5, 2009 அன்று 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

  • இப்பணிகளுக்காக 3 மணிநேர தேர்வு ஒன்று டி.ஆர்.டி.ஓ.,வினால் நடத்தப்படும்.
  • இதில் அப்ஜக்டிவ் வகைக் கேள்விகள் இடம் பெறும்.
  • இதில் உங்களது இன்ஜினியரிங் பிரிவிலிருந்து திறனைப் பரிசோதிக்கும் கேள்விகள் இடம் பெறும்.
  • 2வது தாளில் அப்ளைட் ரிசர்ச் மற்றும் டெவலப்மெண்ட் தொடர்பான கேள்விகள் இடம் பெறும்.
  • இதிலும் அப்ஜக்டிவ் வகைக் கேள்விகள் இடம் பெறும்.
  • மொத்தம் 50 கேள்விகள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • முழு விபரங்களடங்கிய ஏடு மற்றும் விண்ணப்பத்தை ரூ.300 பணமாகச் செலுத்தி ஸ்டேட் பாங்கின் குறிப்பிட்ட கிளைகளில் பெறலாம்.
  • நிரப்பிய விண்ணப்பத்தை தேவைப்படும் இணைப்புகளோடு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி

  • The Director,
  • Recruitment & Assessment Centre,
  • Lucknow Road,
  • Timarpur,
  • Delhi – 110054.

விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: ஜூன் 5, 2009.

போட்டித் தேர்வு நாள்: செப்டம்பர் 6, 2009.

முழு விபரங்களையும் படிவத்தையும் டவுண்லோட் செய்து கொள்ளும் இணைய தள முகவரி: http://rac.drdo.in/

புதன், 29 ஏப்ரல், 2009

மே 6ம் தேதி இன்ஜினியரிங் விண்ணப்பம்

"பொறியியல் படிப்புக்கான விண்ணப்பங்கள், மே மாதம் 6ம் தேதி முதல் வழங்கப்படும்" என சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

  • பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங், இந்த ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ளது.

  • இதற்கான விண்ணப்பங்கள் மே மாதம் 6ம் தேதி முதல் வழங்கப்படும்.

  • தமிழகம் முழுவதும் 58 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

  • எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 250 ரூபாய், இதர பிரிவினர் 500 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

  • விண்ணப்பத்தைப் பெறும் மாணவர்களுக்கு 450 பக்கங்கள் கொண்ட பொறியியல் கல்லூரிகள் பற்றிய விவரக் குறிப்பு வழங்கப்படும்.

  • விண்ணப்பங்களை ஆன்-லைன் மூலம் டவுன்லோடு செய்தும் விண்ணப்பிக்கலாம்.

  • மே மாதம் 31ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

  • ஜூன் 20ம் தேதிக்குள் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

  • மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங் முடிந்த பின், பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் நடக்கும்.

இவ்வாறு மன்னர் ஜவஹர் கூறினார்.

மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்கள் மே மாதம் மூன்றாம் வாரத்தில் வழங்கப்படும் என மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் ஷீலா தெரிவித்தார்.