கலெக்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலெக்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 மார்ச், 2011

சிதம்பரம், புவனகிரி சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்ள புதிய செல்போன் எண்கள்

சிதம்பரம், புவனகிரி சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்வதற்கு புதிய செல்போன் சிம்கார்டுகளை தேர்தல் ஆணையம் உத்தரவின்பேரில் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வழங்கி உள்ளார்.

இந்த எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தேர்தல் சம்பந்தமான எந்த வித புகார்களையும் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சிதம்பரம் சட்டமன்ற தொகுதி
தேர்தல் நடத்தும் அதிகாரி இந்துமதி - 7598703895
(ஆர்.டி.ஓ.சிதம்பரம்)
கல்யாண சுந்தரம் -7598703911
முதன்மை உதவி தேர்தல் அதிகாரி
(ஆர்.டி.ஓ.நேர்முக உதவியாளர் )
கூடுதல் உதவி தேர்தல் அதிகாரி
ராஜேந்திரன் -தாசில்தார் -7598703912
தாசில்தார் ராஜேந்திரன்
பறக்கும் படை அதிகாரி - 7598703931

புவனகிரி சட்டமன்ற தொகுதி
தேர்தல் அதிகாரி- கல்யாண சுந்தரம்
மாவட்டவழங்கல் அலுவலர் -7598703894
உதவி தேர்தல் அலுவலர்-தனசிங்
மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் -7598 703909
உதவி தேர்தல் அலுவலர் -சந்திரா
தனி தாசில்தார் சிதம்பரம் -7598703910
பறக்கும்படை அதிகாரி -பாண்டுரங்கன்
குடிமை பொருள் தாசில்தார் சிதம்பரம் - 7598703931

Source: Daily Thanthi

புதன், 15 ஏப்ரல், 2009

மீனவர்களுக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

மீன்களின் இனவிருத்தியை மேம்படுத்த விசைப்படகு, இழுவலைகளை கொண்டு மீன்பிடிக்க வேண்டாம் - மீனவர்களுக்கு கடலூர் கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வேண்டுகோள்!

மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க விசைப்படகு மற்றும் இழு வலைகளை கொண்டு மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மீன்பிடிக்க தடை

ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15-ந் தேதி முதல் மே 29-ந் தேதி வரை 45 நாட்கள் கடலில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு அரசு தடை விதித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு இன்று (புதன் கிழமை) முதல் மே 29-ந் தேதிவரை மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

இது குறித்து கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மீன்வளத்தை பாதுகாக்க

கடலில் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழக கிழக்கு கடற்கரை நெடுகிலும் உள்ள பகுதி முழுவதிலும் (திருவள்ளூர் மாவட்ட எல்லையில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரை) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் மே 29 முடிய 45 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடை செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த தடை ஆணையின் படி இந்த ஆண்டும் விசைப்படகுகள் மற்றும் இழு வலைப்படகுகள் மூலம் தடை செய்யப்பட்ட 45 நாட்களுக்கும் கடலில் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

45 நாட்களுக்கு...

கடலில் மீன்கள் இனவிருத்திக்கு ஏற்ற காலமான மேற்கண்ட 45 நாட்கள், மீனவர்கள் கடலில் மீன் பிடிப்பதை நிறுத்தி வைப்பதன் மூலம் இடையூறு இல்லாத இனவிருத்தி மேம்பட்டு, மீன்வளம் பெருக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் நலன் கருதி அரசு வகுத்துள்ள இத்தடை ஆணையின்படி இந்த 45 நாட்கள் முடியும்வரை கடலூர் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவலைப் படகுகளைக் கொண்டு மீன்பிடிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.