குழந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், 3 நவம்பர், 2009
ஞாயிறு, 25 அக்டோபர், 2009
நவம்பர் 1ல் சென்னையில் குழந்தைகளுக்கான போட்டிகள்
ஞாயிறு, 31 மே, 2009
ஜூன் 10-ம் தேதி வரை இலவச பிறப்புச் சான்றிதழ் பெறலாம்
கடலூர் மாவட்டத்தில் ஜூன் 10-ம் தேதி வரை இலவச பிறப்புச் சான்றிதழ் பெறலாம் என்று, சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர். மீரா வியாழக்கிழமை தெரிவித்தார்.அரசாணைப்படி ஏப்ரல், மே மாதங்கள் இலவசப் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் மாதங்கள் ஆகும்.
5 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும், இந்த மாதங்களில் இலவசமாக பிறப்புத் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டதால், இலவச பிறப்புச் சான்றிதழ் வழங்கும் மாதங்கள் குறித்து, முன்னரே மக்களுக்குத் தெரிவிக்க முடியாமல் போயிற்று.
எனவே ஏப்ரல், மே மாதங்கள் இலவச பிறப்புச் சான்றிதழ் வழங்கும் மாதங்கள் என்று அரசாணை இருந்த போதிலும், ஜூன் 10-ம் தேதி வரை, மக்கள் இலவசமாகப் பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
இலவச பிறப்புச் சான்றிதழ் வழங்கல் குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் வியாழக்கிழமை நடந்தது.
பிறப்புச் சான்றிதழ்கள், அவற்றின் இருப்பு, பராமரிப்பு, பாதுகாத்தல், பதிவேடுகள் பரிவர்த்தனை மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் ஆட்சியரால் வழங்கப்பட்டது.
பிறப்புகள் அனைத்தும் 100 சதம் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், அனைத்து பிறப்புகளுக்கும் உடனடியாக இலவசமாகச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்றும், கூட்டத்தில் ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டது என்றார் டாக்டர் மீரா.
கூட்டத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் (புள்ளியியல்) என். சுப்பிரமணியன் கலந்து கொண்டு திட்டம் பற்றி தெளிவுபடுத்தினார்.
மாவட்ட வருவாய் அலுவலரும் பிறப்பு இறப்பு அலுவலருமான எஸ். நடராஜன், அனைத்து வட்டாட்சியர்கள், கிராம அலுவலர்கள், வட்டார, தாலுகா மருத்துவமனை அலுவலர்கள் ஊராட்சி, போரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Labels:
அரசாணை,
இலவசம்,
குழந்தை,
சுகாதாரத்துறை,
பிறப்புச் சான்றிதழ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
