இலவசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலவசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 ஜூன், 2009

இலவச பி.இ. புத்தகம் பெற விண்ணப்பிக்கலாம்

புத்தக வங்கியில் இருந்து பி.இ. புத்தகங்கள், கம்ப்யூட்டர் அறிவியல் புத்தகங்களை இலவசமாகப் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக ஸ்ரீ சுமதி விஷால் ஜெயின் கல்வி அறக்கட்டளை சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அனைத்து வகையான பி.இ. புத்தகங்களும், கம்ப்யூட்டர் அறிவியல் புத்தகங்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

புத்தகங்களைப் பெறுவதற்கு சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதற்கான விண்ணப்பங்கள், 'திருக்குமரன் அபார்ட்மென்ட்ஸ், புதிய எண் 12, ராமேஸ்வரம் சாலை (ரங்கன் தெருவில் இருந்து வர வேண்டும்), தி.நகர், சென்னை 17' என்ற முகவரியில் கிடைக்கும்.

விண்ணப்பங்கள் ஜூலை 25-ம் தேதி வரை வழங்கப்படும்.

வார நாட்களில் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் விண்ணப்பங்கள் கிடைக்கும்.

தவிர, புத்தக வங்கிக்கு புத்தகங்களைத் தானமும் செய்யலாம்.

பெறுவதற்கும், புத்தக தானம் செய்வதற்கும் மேலும் விவரங்களை அறிவதற்கான தொலைபேசி எண்கள்: 044-2436 0675/98410-26268.EE

ஞாயிறு, 31 மே, 2009

ஜூன் 10-ம் தேதி வரை இலவச பிறப்புச் சான்றிதழ் பெறலாம்

கடலூர் மாவட்டத்தில் ஜூன் 10-ம் தேதி வரை இலவச பிறப்புச் சான்றிதழ் பெறலாம் என்று, சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் ஆர். மீரா வியாழக்கிழமை தெரிவித்தார்.

அரசாணைப்படி ஏப்ரல், மே மாதங்கள் இலவசப் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் மாதங்கள் ஆகும்.

5 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும், இந்த மாதங்களில் இலவசமாக பிறப்புத் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டதால், இலவச பிறப்புச் சான்றிதழ் வழங்கும் மாதங்கள் குறித்து, முன்னரே மக்களுக்குத் தெரிவிக்க முடியாமல் போயிற்று.

எனவே ஏப்ரல், மே மாதங்கள் இலவச பிறப்புச் சான்றிதழ் வழங்கும் மாதங்கள் என்று அரசாணை இருந்த போதிலும், ஜூன் 10-ம் தேதி வரை, மக்கள் இலவசமாகப் பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இலவச பிறப்புச் சான்றிதழ் வழங்கல் குறித்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் வியாழக்கிழமை நடந்தது.

பிறப்புச் சான்றிதழ்கள், அவற்றின் இருப்பு, பராமரிப்பு, பாதுகாத்தல், பதிவேடுகள் பரிவர்த்தனை மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிவுரைகள் ஆட்சியரால் வழங்கப்பட்டது.

பிறப்புகள் அனைத்தும் 100 சதம் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், அனைத்து பிறப்புகளுக்கும் உடனடியாக இலவசமாகச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்றும், கூட்டத்தில் ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டது என்றார் டாக்டர் மீரா.

கூட்டத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் (புள்ளியியல்) என். சுப்பிரமணியன் கலந்து கொண்டு திட்டம் பற்றி தெளிவுபடுத்தினார்.

மாவட்ட வருவாய் அலுவலரும் பிறப்பு இறப்பு அலுவலருமான எஸ். நடராஜன், அனைத்து வட்டாட்சியர்கள், கிராம அலுவலர்கள், வட்டார, தாலுகா மருத்துவமனை அலுவலர்கள் ஊராட்சி, போரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.