சாலை மறியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாலை மறியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 ஏப்ரல், 2011

பேரூராட்சி அலுவலகம் முன் சாலை மறியல்!


பரங்கிப்பேட்டையில் குடிநீர் கேட்டு, காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில், மின் பற்றாக்குறை காரணமாக, கடந்த 20 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கொடிமரத் தெரு, ஆற்றங்கரை தெருவைச் சேர்ந்த பெண்கள், நேற்று காலை காலி குடங்களுடன் பேரூராட்சி அலுவலகம் முன், மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த, பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தினமும் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக, உறுதியளித்ததைத் தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது. திடீர் மறியலால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமலர் செய்தி

புதன், 12 ஜனவரி, 2011

சிதம்பரம்-கடலூர் சாலையில் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு






வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி, கடந்த இருவாரங்களுக்கு முன், பரங்கிப்பேட்டை பு.முட்லூரில்   கடலூர் - சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும் வகையில் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்ற போது அனைவருக்கும் நிவாரணம் வழங்குவோம் என வருவாய்த் துறையினர் உறுதியளித்திருந்தது தெரிந்ததே. 


 இதைத் தொடர்ந்து நிவாரணம் வழங்க வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பு.முட்லூர், மஞ்சக்குழி பகுதிகளில் கணக்கெடுத்தும் கணக்கெடுத்ததை விட குறைவான நபர்களுக்கு வழங்கப்பட்டதாக முறையீடுகள் வந்தன.