வெள்ள நிவாரண நிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ள நிவாரண நிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 12 ஜனவரி, 2011

சிதம்பரம்-கடலூர் சாலையில் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு






வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி, கடந்த இருவாரங்களுக்கு முன், பரங்கிப்பேட்டை பு.முட்லூரில்   கடலூர் - சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்படும் வகையில் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்ற போது அனைவருக்கும் நிவாரணம் வழங்குவோம் என வருவாய்த் துறையினர் உறுதியளித்திருந்தது தெரிந்ததே. 


 இதைத் தொடர்ந்து நிவாரணம் வழங்க வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பு.முட்லூர், மஞ்சக்குழி பகுதிகளில் கணக்கெடுத்தும் கணக்கெடுத்ததை விட குறைவான நபர்களுக்கு வழங்கப்பட்டதாக முறையீடுகள் வந்தன.

வியாழன், 11 டிசம்பர், 2008

வெள்ள நிவாரண நிதி

பரங்கிப்பேட்டையில் இன்று (11/12/08) வெள்ள நிவாரண நிதி வழங்க பட்டது. பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ஜனாப் ஹாஜி M.S.முஹம்மது யூனுஸ் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், அதிகாரிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிதி உதவியை பெற ஏராளமான மக்கள் திரண்டு வந்தனர்.18 வார்டுகளில் பாதிக்க பட்ட மக்களுக்கு சுமார் 4765 விடுகளுக்கு நிவாரண தொகை வழங்கபட உள்ளது. அதில் முதல் கட்டமாக 1,2 மற்றும் 6 வார்டுகளில் இன்று புதுபள்ளி நடுநிலை பள்ளி வளாகத்தில் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. இதில் குடிசை வீட்டுக்கு தலா ரூபாய் 2000 மும் ஒட்டு வீட்டுக்கு தலா ரூபாய் 1000 மும் வழங்கப்பட்டது.
தகவல் நன்றி : இர்பான் அஹமது , CWO.