சுன்னத்வல்ஜமாஅத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுன்னத்வல்ஜமாஅத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 22 ஏப்ரல், 2008

சுன்னத் வல் ஜமாஅத் முப்பெரும் விழா


பரங்கிப்பேட்டை சுன்னத் வல் ஜமாஅத் சார்பாக மீலாது விழா, குத்பு முஹையதீன் நினைவு சொற்பொழிவு மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் அலுவலகம் திறப்பு ஆகிய முப்பெரும் விழா கும்மத்பள்ளித்தெருவில் நடைபெற்றது. ஜமாஅத் தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் அவர்கள் அலுவலகத்தை திறந்து வைக்க, ஷேக் அப்துல்லா ஜமாலி, முதலானோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்டத்தில் முன்னதாக பேசிய முஹம்மது காஸிம் என்பவர் தனது உரையில் முஹம்மது நபி ரசூல் (ஸல்) அவர்களின் கால் செருப்பு அல்லாஹ்வின் அர்ஷைவிட உயர்வானது, அன்னை ஆமினாவின் மணிவயிறு அல்லாஹ்வின் அர்ஷைவிட மகத்தானது என்றெல்லாம் உளறியது அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியையும் அருவெருப்பினையும் ஏற்படுத்தியதை காண முடிந்தது. சுன்னத்ஜமாஅத் சகோதரர்கள் சிலரும் கூட தங்களுக்கு அந்த கருத்தில் உடன்பாடில்லை என்று பிற்பாடு தனிப்பட்ட முறையில் நம்மிடம் தெரிவித்தனர்.