


கல்வி, குடும்பவியல், அரசியல், பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் மிக்க சிரமத்தை கண்டு வந்த பரங்கி மாநகர மக்களுக்கு ஓர் மைல் கல்லாக இந்த பாலம் அமைந்து இருக்கின்றது என்பதை மறுக்கமுடியாத ஒன்றாகும்.
நல்ல முறையில் தங்களது பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்றால் பல கிலோ மீட்டர் மைல் ஊரை சுற்றி வரவேண்டிய கட்டாயம் என இருந்தமைக்கு இது ஓர் மைல் கல்லாக தான் இருக்கிறது என்பதற்கு மறுப்பதற்கு இல்லை.
வெளிநாடுகளுக்கு சென்றால் தான் தமது இல்லத்தில் அடுப்பு எறியும் என்ற நிலை இன்ஷா அல்லாஹ் இந்த பாலத்தின் பரிபூரணம் சிதம்பரம் நகரத்தை சமீபமாக்கியதால் வெளிநாடுகளுக்கு தங்களது பிள்ளைகளும், கணவன்மார்களும் சென்றால் தான் உணவு என்ற நிலை மாறி நாமும் நமது குடும்பத்தாருடன் இனைந்து உள்ளுரிலேயே தொழில் செய்து வாழலாம் என்ற நம்பிக்கை பரங்கி மாநகர மக்களுக்கு ஏற்பட தான் செய்துள்ளது.
அல்லாஹ் விரைவில் நிறைவு பெற அனைவர்களின் நோக்கங்களையும் நிறைவேற்ற செய்வானாக. ஆமீன்!!
அல்லாஹ் விரைவில் நிறைவு பெற அனைவர்களின் நோக்கங்களையும் நிறைவேற்ற செய்வானாக. ஆமீன்!!

சற்று உற்றுப்பார்த்தால் அருவருப்பான, தேசதுரோக, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஆணவம் மற்றும் மக்களின் மீதான அலட்சியப்போக்கு மெகா சைஸில் தெரியும். தெரிகிறதா?
கும்பகோணம் பள்ளி தீவிபத்து, சரிகாஷா ஈவ்டீசிங் மரணம் போல இங்கும் எதாவது பெரிய சம்பவங்கள் நிகழ்ந்தால்தான் இவர்கள் தூக்கத்திலிருந்து விழிப்பார்கள் போல.


சிதம்பர பயணத்திற்கு கிட்டத்தட்ட பன்னிரண்டு கிலோ மீட்டர், பெட்ரோல் மற்றும் நேர மிச்சம் தரும் இந்த பாலம் இத்தனை லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வரும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.