வியாழன், 17 ஏப்ரல், 2008

திடக்கழிவு மேலாண்மை திட்டம்



பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றம் சார்பாக சமுதாயம் சார்ந்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்முறை விளக்கம் நகரின் பல இடங்களில் நடைபெற்றது. சின்னக்கடை முனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குப்பையினை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரிப்பதையும், பிளாஸ்டிக் மற்றும் அதன் பொருட்களால் விளயும் தீமைகள் குறித்தும், குப்பைகள கொண்டு இயற்கை உரம் தயாரிப்பது பற்றியும் புரொஜக்டர் மூலம் விளக்கப்படம் காண்பித்து விளக்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். அரசினர் கும்மத்பள்ளி மாணவ மாணவியர் நடத்திய பிளாஸ்டிக் பொருட்கள தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வு பேரணியில் இது பற்றிய கோஷங்கள் முழங்கப்பட்டது. பேரணியில் கலந்து கொண்ட மாணவர்களில் பலர் காலில் காலணியின்றி வந்திருந்தது உறுத்தலாகவே இருந்தது.

25 கி.மீ தள்ளியிருந்தால் நம்மை பாதிக்காதா என்ன?

சிப்காட்டிலிருந்து 25 கி.மீ தள்ளியிருந்தால் நம்மை பாதிக்காதா என்ன?சாபக்கேடாக வந்து வாய்த்திருக்கின்றன சில வரங்கள் கடலூருக்கு. சிப்காட் தொழிற்பேட்டை கடலூருக்கு ஒரு வரப்பிரசாதமாக கருதப்பட்ட நிலையில் அது தன் கோரமுகத்தை காட்ட துவங்கியிருக்கிறது இந்த வரம்.

சாதாரணமாக 10 லட்சம் பேரில் ஒருவருக்கு வர வாய்ப்பு இருக்கும் கேன்சர், இந்த பகுதியில் 1000‍ல் இருவருக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றன சோதனை அறிக்கைகள்.

மெல்ல மெல்ல ஊடுருவிக்கொண்டிருக்கிறது நோய். யாருக்கும் அறியாமல் ஆனால் உறுதியுடன்.
நாக்பூரில் அமைந்திருக்கும் தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு தான் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது. (INDIA: Chemical Park increases cancer risk in Cuddalore - Study Confirms Bucket Brigade results!)

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் இருப்பவை முழுவதும் கிட்டத்தட்ட கெமிகல் கம்பெனிகள். இருப்பது தவறில்லை யாருக்கும் பழுதில்லா நிலையில்.

பகலை விட இரவுநேரங்களில் அதிக மாசு வாயுக்களை வெளியிட்டு கொல்கின்றன பெரும்பாலான தொழிற்சாலைகள்.

இது பற்றிய அறிக்கையை தேசிய சுற்றுப்புறசூழல் ஆராய்ச்சி அமைப்பு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு 2004‍ லிலேயே இந்த அறிக்கையை தந்துவிட்டதாம். இன்னும் சாவு எண்ணிக்கை வராததால் ஒருவேளை வாரியம் காத்திருக்கிறதா என்று தெரியவில்லை.

சிப்காட்டை சுற்றி இருக்கும் பகுதிகளில் உள்ள காற்றில் வழக்கத்துக்கு மாறாக 94 வித மாசுக்கள் கலந்திருக்கின்றன. அவற்றில் 15 மிகக்கொடியவை.
இரத்தப்புற்றுநோயை உருவாக்கும் பென்ஸீன் இப்பகுதிகளில் 15 மடங்கு அதிக அளவில் உள்ளது.

இதில் முக்கிய விஷயம், இந்த சோதனைகளை செய்த நேரத்தில் பல தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தனவாம். அதற்கே இந்த நிலைமை. அவையும் செயல்பட்டுக்கொண்டி(று)ருந்தால், என்ன நடந்திருக்கும்.

சாலை வழியாக மட்டுமே பரங்கிப்பேட்டை 25 கி.மீ. ஆனால் இந்த கொடிய வாயுக்கள் பஸ்ஸில் பயணம் செய்து ஊருக்கு வராது. கிட்டத்தட்ட 10 கி.மீ. ஆகாய பயணம் போதும்... பரங்கிப்பேட்டைக்கு.

எத்தனை கழகங்கள்! எத்தனை சமூக நிறுவனங்கள்!! எத்தனையோ அமைப்புகள்!!! அட யாராவது ஆரம்பித்து வையுங்களேன் அய்யா! அவசியமே இல்லாத விசயத்துக்கெல்லாம் போரட வீதியிறங்கும் போது இதை கண்டுக்கமாலேயே விட்டு விடுவீர்களா?

For more details... please click: INDIA: Chemical Park increases cancer risk in Cuddalore - Study Confirms Bucket Brigade results!

செவ்வாய், 15 ஏப்ரல், 2008

இறப்புச் செய்தி!

சகோ. கு. நிஜாம், சகோ. கு. அப்துஸ் ஸமத், சகோ. கு. ஹஸன் அலி, சகோ. கு. ஹிதாயத்துல்லாஹ் மற்றும் சகோ. கு. அப்துல் ஹமீது இவர்களின் தகப்பனார் குலாம் தஸ்தகிர் மர்ஹீம் ஆகிவிட்டார்கள்.. இன்ஷாஅல்லாஹ் இன்று பரங்கிப்பேட்டையில் அன்னாரின் உடல் நல்லடக்கம் செய்யயப்டுகிறது.

இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜீவூன்...