திங்கள், 1 செப்டம்பர், 2008
என்று தணியும் இந்த ...
பரங்கிப்பேட்டை to சென்னை எக்ஸ்பிரஸ்

பரங்கிமா நகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை பரிசீலித்து பரங்கிப்பேட்டையிலிருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் சேவையில் போக்குவரத்து பணியை தொடர்ந்தது அரசுப்போக்குவரத்து கழகம். இதன்படி இரவு 10 மணிக்கு பரங்கிப்பேட்டையிலிருந்து தினமும் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறது. நேற்று ஞாயிறு என்பதால் அதிகமான பயணிகள காண முடிந்தது.
இதுபற்றி இப்பேருந்தின் நடத்துனர் கூறியதாவது : "இப்புதிய பேருந்தின் சேவை சிறப்பாக அமைய இவ்வூர் மக்கள் ஆதரவளித்தால்தான் இதனை எக்ஸ்பிரஸ் சேவையாக தொடர முடியும்." இப்பேருந்து சேவையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.
"இது எங்களுக்கு மட்டுமின்றி பொதுமக்கள் அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் எங்களின் மிகப்பெரிய சிரமம் குறைந்துள்ளது." என்கின்றனர் சென்னை கல்லூரிகளில் படிக்கும் பரங்கிப்பேட்டை மாணவர்கள்.
புதன், 27 ஆகஸ்ட், 2008
அபுதாபி PNO Welfare Committee யின் அறிவிப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் !
வரும் வெள்ளிக்கிழமை (29/08/2008) மாலை 4:30 மணிக்கு (அஸர் தொழுகைக்குப் பிறகு), நமதூர் நலன் குறித்த கலந்துரையாடலும் அத்துடன் Pno Welfare Committee யின் நிர்வாக தேர்ந்தெடுப்பும் ஏற்பாடு செய்துள்ளோம். அன்பர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக்கொண்டு நமதூருக்கான தங்களது பங்களிப்பை நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நடைபெரும் இடம்:
அலாவுத்தீன்
வீட்டு எண்: 201ஃபுஜைரா உணவகம் அருகில்,
எல்டோராடோ தியேட்டர் எதிர்புறம்,
எலக்ட்ரா சாலை, அபுதாபி.
தொடர்புக்கு: அபுல் ஹசன்: 050-7723097, 055-7723097
அப்துல் ஹமீது: 050-6898044
உமர்: 0559019721
-- அன்புடன்,
Pno Welfare Committee
தகவல்: சகோ. இப்ராஹிம் சாகுல் ஹமீது (பாஷா)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...