ஞாயிறு, 30 நவம்பர், 2008

புனித ஹஜ் பயணம் 2008






பரங்கப்பேட்டையிலிலுருந்து இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்காக 25 பேர் நேற்று புறப்பட்டு சென்றனர். இவர்களை வழி அனுப்பி வைக்க ஏராளமான மக்கள் மீராப்பள்ளியில் திரண்டனர். இதில் பெண்களின் கூட்டமும் நிரம்பியது. வழி அனுப்பி வைக்க அதிகமான வாகனங்கள் அணிவகுத்து சென்றது சிறப்பம்சமாக இருந்தது.

சனி, 29 நவம்பர், 2008

மழை பாதிப்பு - நிவாரணம் கிடைக்குமா..?: யூனுஸ் பேட்டி.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அரசு நிவாரணம் கிடைக்குமா..? பேரூராட்சித் தலைவர் யூனுஸ் அவர்கள் வலைப்பூவிற்கு வலைஞர் கு. நிஜாமிடம் அளித்த பேட்டி வீடியோ தொகுப்பாக...


பேட்டி மற்றும் வீடியோ தொகுப்பு: கு. நிஜாம்.

இறப்புச்செய்தி

பரங்கிபேட்டை காஜியார் தெருவை சேர்ந்த (காஜியார் சந்து முனை வீடு) ஹமீதுத்தீன் அவர்களின் மகனார் சஜ்ஜத் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள். முன்னாள் பரங்கிபேட்டை காஜியார் மர்ஹூம் கபீர் கான் சாஹிப் இவர்களின் தாய் மாமா ஆவார்.
இளம் வயதான அவரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு பொறுமையை கைகொள்ளவும் அமைதியையும் ஆறுதலும் வல்ல இறைவன் நாட பிரார்த்திப்போம்.