திங்கள், 1 டிசம்பர், 2008

உயிர்கொல்லி பாதுகாப்பு தினம்

இன்று டிசம்பர் முதல் தினம். உலகம் முழுதும் எய்ட்ஸ் நோய் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கபடுகிறது.
எய்டஸ் என்பது கெட்ட பழக்கமுள்ள யாருக்கோ வரும் நோய் என்று மட்டும் நம்பினால் அது மூடநம்பிக்கை. முறையற்ற உடல் தொடர்புகளினால் மட்டும் இந்த நோய் பரவுவதில்லை. சுத்தப்படுத்தப்படாத பிளேடுகள், ஊசிகள், மூலம் கூட இந்த நோய் பரவும்.

இறைவனின் மாபெரும் சோதனைகளில் ஒன்றான, இன்றைய மருத்துவ முறைகளில் தீர்வே இல்லாததாக கருதப்படும் இந்நோய்க்கு ஒரே மருந்து இறைவன் அளித்த வாழ்க்கை நெறியில் மனக்கட்டுப்பாட்டுடன் முறையாக வாழ்வதுதான்.

பரங்கிபேட்டையில் இருந்து சுமார் நாற்பத்தி எட்டு (48) பேர், சென்னை கிண்டியில் உள்ள எய்ட்ஸ் நோய் தீவிர சிகிச்சை பிரிவுக்கு வழக்கமான சிகிச்சைகளுக்காக சென்று வருகிறார்கள் என்று இங்கே உள்ள மருத்துவ தொண்டு நிறுவனத்தின் மேலாளர் ஒருவர் ஆதாரபூர்வமாக கூறியதை இந்த நேரத்தில் வெளிப்படுத்த விரும்புகிறோம்.

படத்திளுள்ளவரின் விழிகளில் ஏதேனும் தெரிகிறதா?

ஞாயிறு, 30 நவம்பர், 2008

பாராட்டுக்குரிய ஸ்பைடர் மேன்கள்

குற்றம் காணின் சுட்டுவதும், நிறை காணின் ஷொட்டுவதும் மீடியாவின் மரபாமே என்று குட்டி (குட்டாத) கவிதை சொல்கிறது.
கடந்த நோன்பு பெருநாள் அன்று வழ்க்கமான ஐந்து மணி நேர மின்வெட்டுக்கு பதில் எட்டு மணி நேரம் மின்சாரத்தை வெட்டிய மின்துறையை பற்றி கண்டன பதிவு வெளியிட்டிருந்தோம். தற்போது அதே மின்சார துறை சிறப்பாக செயல்பட்டதற்காக மனதார பாராட்டுகிறோம்.
கடும் மழை, புயல் காற்றினால் பல இடங்களில் மரங்கள் விழுந்து மின் கம்பிகள் அறுந்திருந்த நிலையில் அவைகளை மிக துரிதமாக செயல்பட்டு சரி செய்து மிக விரைவாக மின் இணைப்பு வழங்கிய மின் துறை அதிகாரிகளயும், ஊழியர்களையும், ஊர் மக்கள் சார்பாகவும், வலைப்பூ சார்பாகவும் மனதார பாராட்டுகிறோம்.
இது அவர்களின் பணி தான். ஆனால், கடலூர் சிதம்பரம் போன்ற பெரிய ஊர்களிலேயே மூன்று நாட்கள் கழித்தே மெது மெதுவாக மின்சாரம் வழங்கப்பட்ட நிலையில் நமது ஊரின் சில இடங்களில் முற்றிலும் சீர் குலைந்து போயிருந்த பவர் கேபிள்களை சீர்செய்து இத்தனை விரைவில் இயல்பு நிலையை திருப்புவார்கள் என்று யாருமே நம்பவில்லை. நிச்சயம் இவர்கள் பாராட்டுக்குரியவர்கள் தான்.

புனித ஹஜ் பயணம் 2008






பரங்கப்பேட்டையிலிலுருந்து இந்த ஆண்டு புனித ஹஜ் பயணத்திற்காக 25 பேர் நேற்று புறப்பட்டு சென்றனர். இவர்களை வழி அனுப்பி வைக்க ஏராளமான மக்கள் மீராப்பள்ளியில் திரண்டனர். இதில் பெண்களின் கூட்டமும் நிரம்பியது. வழி அனுப்பி வைக்க அதிகமான வாகனங்கள் அணிவகுத்து சென்றது சிறப்பம்சமாக இருந்தது.