சனி, 6 டிசம்பர், 2008

பாம்பு.. பாம்பு....

இன்று மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு மீராபள்ளி கபறுஸ்தான் அருகில் சுமார் ஐந்து அடி நீளமுள்ள மிக தடிமனான நல்ல பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது.
( பாம்பு கடித்தால் தான் நியூஸ் அதை அடித்தால் என்ன நியூஸ் என்று இந்த பதிவுக்கு ஒரு கமண்ட்டை எதிர்பார்ப்போம். )

வெள்ளி, 5 டிசம்பர், 2008

மீண்டும் ஒரு புயல் சின்னம்!


வங்க கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் கடும் மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

நிஷா புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை கொட்டியது. இதில் பரங்கிப்பேட்டை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன.

கடந்த சில நாட்களாகத் தான் மழை நின்றுள்ளது. இந்நிலையில் மீண்டும் வங்க கடலில் இந்தோனேசியாவுக்கு வட மேற்கு பகுதியில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

அது தொடர்ந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது சனிக்கிழமை வாக்கில் சென்னைக்கு அருகே வந்து விடும் என்பதால் அன்று இரவு முதல் தமிழகத்தில் மீண்டும் மழை ஆரம்பிக்கவுள்ளது.

சமீபத்திய புயல் மழை ஏற்படுத்திய பாதிப்பே இன்னும் விலகாமல், பல பகுதிகள் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் உருவாகியுள்ள புயல் குறித்த செய்தி பரங்கிப்பேட்டை மக்களை, குறிப்பாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

புதன், 3 டிசம்பர், 2008

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ....

புயல் மழை நின்று போனது. மக்களின் சங்கட வாழ்வும் இன்னல்களும் மாறாமல் அப்படியேதான் தொடர்கிறது. மக்கள் நலத்திற்கான அடிப்படை சமுதாய கட்டமைப்புக்களில் முக்கியமானது தரமான சாலை வசதி. பேரூராட்சியின் கீழ் உள்ள ஊர் தெருக்கள் முழுவதும் சிமென்ட் சாலைகள் பளபளக்க, முட்லூர் முதல் பெரிய தெரு முனை வரையிலான நெடுஞ்சாலை துறையினரின் பொறுப்பில் உள்ள, (ஏற்கனவே தில்லாங்குத்தான) சாலை அசிங்கமாய் பல்லிளிக்கிறது. (பார்க்க படங்கள்)

ஊரின் முதுகெலும்பு போன்ற முக்கிய சாலையான இது (ஹை ஸ்கூல் ரோடு, கீரைகார தெரு, மற்றும் முட்லூர் வரைக்குமான பிரசித்தி பெற்ற வழவழ் சாலை ) மிக மோசமான நிலையில் இருப்பது, அதன் வழியாக செல்லும் பொதுமக்கள் அனைவருக்கும் மிகுந்த் அவஸ்தையையும் சிரமத்தையும் அளிக்கிறது. வாகனங்கள் பஞ்சர் ஆவது, கற்கள் சிதறி மேலே தெறிப்பது வாடிக்கை நிகழ்வாகிவிட்டது.


எக்காலத்திர்க்குமான மிக மோசமான தெரு என்ற சிறப்பு பெயரை பெற்றிருந்த பெரிய தெருவே பளபள என்று ஆகிவிட்ட நிலையில் இன்னும் சீர் பெறாத இந்த தெரு அந்த பெயரை விரைவில் பெறுமா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது. இதற்க்கான திட்டம் தீட்டப்பட்டு, இன்னும் நடைமுறை படுத்தபடாத நிலையில் நெடுஞ்சாலை துறையினரின் இந்த அலட்சியபோக்கு மாறுமா?