புதன், 24 டிசம்பர், 2008

அக்கம்பக்கம்: புதுச்சத்திரம் - பு.முட்லூர் சாலை உடைப்பு!

சமீபத்தில் பெய்த வரலாறு காணாத மழை சுற்றுப்புற புவியியலில் நிகழ்த்திவிட்ட பாதிப்புகள் இன்னமும் சரிசெய்யப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளன.

காட்டாக, புதுச்சத்திரத்தை அடுத்துள்ளதொரு கிராமத்தில் ஊருக்குள் புகுந்த மழைநீரிலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் சாலையில் குறுக்கே பள்ளங்களை வெட்டிவிட்டனர் . தண்ணீர் வடிந்து பலநாள்களாகியும் வெட்டிவிடப்பட்ட சாலைகள் மறுசீரமைப்பு செய்யப்படாததால் சிதம்பரத்தில் இருந்து புதுச்சத்திரம் செல்லும் நகரப்பேருந்துகள் வேளங்கிப்பட்டு வரையே வந்து திரும்பிச்செல்கின்றனவாம்.

இதனால் பொதுமக்களும் பள்ளி மாணவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

வேளங்கிப்பட்டு, தச்சக்காடு, சேந்திரகிள்ளை, மணிக்கொல்லை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடலூருக்குச் செல்லவேண்டுமானால் பு.முட்லூர் வந்து பேருந்து பிடிக்கவேண்டிய அவலத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

காதுகள் கேட்பதற்கு மட்டுமல்ல...

தேவையற்ற விஷயங்களை தெரிந்து கொள்ள சில மனிதர்கள் எப்போதும் தங்கள் காதுகளை தீட்டி கொண்டு வைத்திருப்பதை பார்த்திருப்போம்.

ஆனால் பரங்கிபேட்டையில் காணப்பட்ட நீண்ட காதுகளை உடைய வித்தியாசமான இந்த ஆடு, அப்படி எந்த செய்தியையும் கேட்க்க ஆவாலாக இருப்பது போல் தெரியவில்லை. நாங்கள் போட்டோ பிடிக்க போஸ் கொடுக்க சொல்லி வற்புறுத்திய போது கூட ஏதும் பேசாமல் மறுத்து விட்டது.

இளம்பிள்ளைவாத தடுப்பு நாள்


இளம்பிள்ளைவாதம் எனும் கொடுமையான நோயை ஒழித்து கட்ட அரசாங்கம் அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருகிறது. வருடம் தோறும் இரண்டு நாட்கள் போலியோ தடுப்பு சொட்டு மருந்துகளை இலவசமாக ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அளித்து வருகிறது. இன்று அந்த நாள். நமதூரில் பல இடங்களில் இதற்கென தற்காலிக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.