திங்கள், 30 மார்ச், 2009

தமிழக நாடாளுமன்றத் தொகுதிகள்

மறுவரையறைப்படி தமிழக நாடாளுமன்றத் தொகுதிகளும் அவற்றுள் அடங்கியுள்ள பேரவைத் தொகுதிகளும்:-

1. திருவள்ளூர் (தனி) - 1. கும்மிடிப்பூண்டி, 2. பொன்னேரி (தனி), 3. திருவள்ளூர், 4. பூந்தமல்லி (தனி), 5. ஆவடி, 6. மாதவரம்.

2. வடசென்னை - 1. திருவொற்றியூர், 2. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், 3. பெரம்பூர், 4. கொளத்தூர், 5. திரு.வி.க. நகர் (தனி), 6. ராயபுரம்.

3. தென் சென்னை - 1. விருகம்பாக்கம், 2. சைதாப்பேட்டை, 3. தியாகராய நகர், 4. மயிலாப்பூர், 5. வேளச்சேரி, 6. சோளிங்கநல்லூர்.

4. மத்திய சென்னை - 1. வில்லிவாக்கம், 2. எழும்பூர் (தனி), 3. துறைமுகம், 4. சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி, 5. ஆயிரம் விளக்கு, 6.அண்ணா நகர்.

5. ஸ்ரீபெரும்புதூர் - 1. மதுரவாயல், 2. அம்பத்தூர், 3. ஆலந்தூர், 4. ஸ்ரீபெரும்புதூர் (தனி), 5. பல்லாவரம், 6. தாம்பரம்.

6. காஞ்சிபுரம் (தனி) - 1. செங்கல்பட்டு, 2. திருப்போரூர், 3. செய்யூர் (தனி), 4. மதுராந்தகம் (தனி), 5. உத்திரமேரூர், 6. காஞ்சிபுரம்.

7. அரக்கோணம் - 1. திருத்தணி, 2. அரக்கோணம் (தனி), 3. சோளிங்கர், 4. காட்பாடி, 5. ராணிப்பேட்டை, 6. ஆர்க்காடு

8. வேலூர் - 1. வேலூர், 2. அணைக்கட்டு, 3. கீழ்வைத்தியனான் குப்பம் (தனி), 4. குடியாத்தம் (தனி), 5. வாணியம்பாடி, 6. ஆம்பூர்.

9. கிருஷ்ணகிரி - 1. ஊத்தங்கரை (தனி), 2. பர்கூர், 3. கிருஷ்ணகிரி, 4. வெப்பனஹள்ளி, 5. ஓசூர், 6. தளி.

10. தர்மபுரி - 1. பாலக்கோடு, 2. பெண்ணாகரம், 3. தர்மபுரி, 4. பாப்பிரெட்டிபட்டி, 5. அரூர் (தனி), 6. மேட்டூர்.

11. திருவண்ணாமலை - 1. ஜோலார்பேட்டை, 2. திருப்பத்தூர், 3. செங்கம் (தனி), 4. திருவண்ணாமலை, 5. கீழ் பெண்ணாத்தூர், 6. கலசப்பாக்கம்.

12. ஆரணி - 1. போளூர், 2. ஆரணி, 3. செய்யாறு, 4. வந்தவாசி (தனி), 5. செஞ்சி, 6. மயிலம்.

13. விழுப்புரம் (தனி) - 1. திண்டிவனம் (தனி), 2. வானூர் (தனி), 3. விழுப்புரம், 4. விக்கிரவாண்டி, 5. திருக்கோயிலூர், 6. உளுந்தூர்பேட்டை.

14. கள்ளக்குறிச்சி - 1. ரிஷிவந்தியம், 2. சங்கராபுரம், 3. கள்ளக்குறிச்சி (தனி), 4. கங்கவல்லி (தனி), 5. ஆத்தூர் (தனி), 6. ஏற்காடு (தனி-ப.கு).

15. சேலம் - 1. ஓமலூர், 2. எடப்பாடி, 3. சேலம் மேற்கு, 4. சேலம் வடக்கு, 5. சேலம் தெற்கு, 6. வீரபாண்டி.

16. நாமக்கல் - 1. சங்ககிரி, 2. ராசிபுரம் (தனி), 3. சேந்தமங்கலம் (தனி-ப.கு), 4. நாமக்கல், 5. பரமத்தி வேலூர், 6. திருச்செங்கோடு.

17. ஈரோடு - 1. குமாரபாளையம், 2. ஈரோடு கிழக்கு, 3. ஈரோடு மேற்கு, 4. மொடக்குறிச்சி, 5. தாராபுரம் (தனி), 6. காங்கேயம்.

18. திருப்பூர் - 1. பெருந்துறை, 2. பவானி, 3. அந்தியூர், 4. கோபிச்செட்டிபாளையம், 5. திருப்பூர் வடக்கு, 6. திருப்பூர் தெற்கு.

19. நீலகிரி (தனி) - 1. பவானி சாகர், 2. உதகமண்டலம், 3. கூடலூர் (தனி), 4. குன்னூர், 5. மேட்டுப்பாளையம், 6. அவினாசி (தனி).

20. கோயம்புத்தூர் - 1. பல்லடம், 2. சூலூர், 3. கவுண்டம்பாளையம், 4. கோயம்புத்தூர் வடக்கு, 5. கோயம்புத்தூர் தெற்கு, 6. சிங்காநல்லூர்.

21. பொள்ளாச்சி - 1. தொண்டாமுத்தூர், 2. கிணத்துக்கடவு, 3. பொள்ளாச்சி, 4. வால்பாறை (தனி), 5. உடுமலைப்பேட்டை, 6. மடத்துக்குளம்.

22. திண்டுக்கல் - 1. பழனி, 2. ஒட்டன்சத்திரம், 3. ஆத்தூர், 4. நிலக்கோட்டை (தனி), 5. நத்தம், 6. திண்டுக்கல்.

23. கரூர் - 1. வேடசந்தூர், 2. அரவக்குறிச்சி, 3. கரூர், 4. கிருஷ்ணராயபுரம் (தனி), 5. மணப்பாறை, 6. விராலிமலை.

24. திருச்சிராப்பள்ளி - 1. ஸ்ரீரங்கம், 2. திருச்சிராப்பள்ளி மேற்கு, 3. திருச்சிராப்பள்ளி கிழக்கு, 4. திருவெறும்பூர், 5. கந்தர்வக்கோட்டை (தனி), 6. புதுக்கோட்டை.

25. பெரம்பலூர் - 1. குளித்தலை, 2. லால்குடி, 3. மண்ணச்சநல்லூர், 4. முசிறி, 5. துறையூர் (தனி), 6. பெரம்பலூர் (தனி).

26. கடலூர் - 1. திட்டக்குடி (தனி), 2. விருத்தாச்சலம், 3. நெய்வேலி, 4. பண்ருட்டி, 5. கடலூர், 6. குறிஞ்சிப்பாடி.

27. சிதம்பரம் (தனி) - 1. குன்னம், 2. அரியலூர், 3. ஜெயங்கொண்டம், 4. புவனகிரி, 5. சிதம்பரம், 6. காட்டுமன்னார்கோயில் (தனி).

28. மயிலாடுதுறை - 1. சீர்காழி (தனி), 2. மயிலாடுதுறை, 3. பூம்புகார், 4. திருவிடைமருதூர் (தனி), 5. கும்பகோணம், 6. பாபநாசம்.

29. நாகப்பட்டினம் (தனி) - 1. நாகப்பட்டினம், 2. கீழ்வேளூர் (தனி), 3. வேதாரண்யம், 4. திருத்துறைப்பூண்டி (தனி), 5. திருவாரூர், 6. நன்னிலம்.

30. தஞ்சாவூர் - 1. மன்னார்குடி, 2. திருவையாறு, 3. தஞ்சாவூர், 4. ஒரத்தநாடு, 5. பட்டுக்கோட்டை, 6. பேராவூரணி.

31. சிவகங்கை - 1. திருமயம், 2. ஆலங்குடி, 3. காரைக்குடி, 4. திருப்பத்தூர், 5. சிவகங்கை, 6. மானாமதுரை (தனி).

32. மதுரை - 1. மேலூர், 2. மதுரை கிழக்கு, 3. மதுரை வடக்கு, 4. மதுரை தெற்கு, 5. மதுரை மத்தி, 6. மதுரை மேற்கு.

33. தேனி - 1. சோழவந்தான் (தனி), 2. உசிலம்பட்டி, 3. ஆண்டிப்பட்டி, 4. பெரியகுளம் (தனி), 5. போடி நாயக்கனூர், 6. கம்பம்.

34. விருதுநகர் - 1. திருப்பரங்குன்றம், 2. திருமங்கலம், 3. சாத்தூர், 4. சிவகாசி, 5. விருதுநகர், 6. அருப்புக்கோட்டை.

35. ராமநாதபுரம் - 1. அறந்தாங்கி, 2. திருச்சுழி, 3. பரமக்குடி (தனி), 4. திருவாடானை, 5. ராமாநாதபுரம், 6. முதுகுளத்தூர்.

36. தூத்துக்குடி - 1. விளாத்திகுளம், 2. தூத்துக்குடி, 3. திருச்செந்தூர், 4. ஸ்ரீவைகுண்டம், 5. ஒட்டப்பிடாரம் (தனி), 6. கோவில்பட்டி.

37. தென்காசி (தனி) - 1. ராஜபாளையம், 2. ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), 3. சங்கரன்கோவில் (தனி), 4. வாசுதேவநல்லூர் (தனி), 5. கடையநல்லூர், 6. தென்காசி.

38. திருநெல்வேலி - 1. ஆலங்குளம், 2. திருநெல்வேலி 3. அம்பாசமுத்திரம், 4. பாளையங்கோட்டை, 5. நாங்குனேரி, 6. ராதாபுரம்.

39. கன்னியாகுமரி - 1. கன்னியாகுமரி, 2. நாகர்கோவில், 3. குளச்சல், 4. பத்மநாபபுரம், 5. விளவங்கோடு, 6. கிள்ளியூர்.

ஞாயிறு, 29 மார்ச், 2009

வரவிருக்கும் முக்கிய தேர்வுகள்

  • சார்ட்டர்ட் அக்கவுன்டன்சி சி.பி.டி. தேர்வு - மார்ச் 28, 29 மற்றும் ஜூன் 28

  • ஆல் இந்தியா பிரீ மெடிக்கல் தேர்வு - ஏப்ரல் 5

  • வி.ஐ.டி.,யின் வி.ஐ.டி.இ.இ.இ., 2009 தேர்வு - ஏப்ரல் 18

  • அம்ருதா கல்வி நிறுவனங்களில் பி.டெக்., படிப்புக்கான நுழைவுத் தேர்வு - ஏப்ரல் 19

  • காருண்யா பல்கலைக்கழக இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு - ஏப்ரல் 25

  • ஏ.ஐ.இ.இ.இ., தேர்வு - ஏப்ரல் 26

  • சிம்பயாசிஸ் சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு - மே 2

  • ஏ.ஐ.எம்.ஏ., நடத்தும் அடுத்த மேட் தேர்வு - மே 3

  • ஏ.எப்.எம்.சி., என்னும் ராணுவ மருத்துவப் படிப்பு நுழைவுத் தேர்வு - மே 3

  • எஸ்.ஆர்.எம்., நிறுவனங்களின் பட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு - மே 3

  • ஐ.சி.எப்.ஏ.ஐ., எம்.சி.ஏ., நுழைவுத் தேர்வு - மே 3

  • பிட்ஸ் பிலானியின் பிட்சாட் 2009 தேர்வு - மே 9

  • என்.சி.எச்.எம்.சி.டி., நடத்தவுள்ள ஓட்டல் மேனேஜ்மென்ட் நுழைவுத் தேர்வு - மே 9

  • கிளாட் என்னும் அகில இந்திய சட்டக் கல்வி நுழைவுத் தேர்வு - மே 17

  • அமிர்தா நிறுவனங்களின் எம்.பி.பி.எஸ்., படிப்பு நுழைவுத் தேர்வு - மே 17

  • தேசிய தொழில்நுட்ப நிறுவன (என்.ஐ.டி.,) எம்.சி.ஏ., நுழைவுத் தேர்வு - மே 17

  • ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக எம்.சி.ஏ., நுழைவுத் தேர்வு - மே 16

  • ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக இன்ஜினியரிங் நுழைவுத் தேர்வு - மே 18

  • ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஒருங்கிணைந்த பயோடெக் நுழைவுத் தேர்வு - மே 18

  • புவனேஸ்வரிலுள்ள கிட் சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வு - மே 18

  • ஜிப்மர் எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வு - ஜூன் 7

  • மத்திய பிளாஸ்டிக் இன்ஜினியரிங் ‘சிப்பெட்‘ தேர்வு - ஜூன் 14

நன்றி: கல்வி மலர் http://www.kalvimalar.com/tamil/ScrollNewsDetails.asp?id=1318

லட்சியத்தை முடிவு செய்து கல்வியை தொடருங்கள்

லட்சியத்தை முடிவு செய்து விட்டு, கல்வியை தேர்வு செய்து தொடருங்கள், என சென்னை பல்கலை பேராசிரியர் டாக்டர் காஜா ஷெரீப் பேசினார்.

கோவையில் தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம் பல்கலையும் இணைந்து நடத்திய ‘வழிகாட்டி’ கல்வி, வேலைவாய்ப்பு கண்காட்சி மார்ச் 27ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இறுதிநாள் நிகழ்ச்சியில் சென்னை பல்கலை மேலாண்மை துறை பேராசிரியர் டாக்டர் காஜா ஷெரீப் பேசியதாவது:

பலர் பட்டப்படிப்பிற்கு பின், லட்சியத்தை முடிவு செய்கின்றனர். ஆனால், பட்டப்படிப்புக்கு முன் லட்சியத்தை தேர்வு செய்து, படிப்பை அதற்கு ஏற்றவாறு படிக்க வேண்டும்.

படிக்கும்போதே பல திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

தலைமைப்பண்பு, நுண்ணறிவுத்திறன், அலசி ஆராயும் திறனை பெறுவது மிக அவசியம்.

தொடர்பு இல்லாத பாடங்களை ஒருங்கிணைத்து நிர்வாகிக்கும் பண்பை வளர்க்கும் திறனை மேலாண்மை படிப்புகள் ஏற்படுத்துகின்றன.

பி.பி.ஏ., படித்து விட்டுத் தான் எம்.பி.ஏ., படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பி.பி.ஏ., முடித்த பிறகு, எம்.பி.ஏ., படிக்காமல் இருப்பது வீண். எந்த ஒரு அங்கீகாரம் பெற்ற இளநிலை பட்டப்படிப்பு படித்தாலும், எம்.பி.ஏ., படிக்க முடியும். பார்மசி முடித்தவர்களும் கூட, எம்.பி.ஏ., படிக்கலாம்.

எம்.பி.ஏ., பட்டத்தை தேர்வு செய்யும் முன், அதில் உள்ள பல்வேறு பிரிவுகளை அறிந்து, அவசியமானதை தேர்வு செய்ய வேண்டும். எம்.பி.ஏ., சிஸ்டம்ஸ், டூரிஸம், ரீடைல், பைனான்ஸ், சப்ளை செயின், மார்க்கெட்டிங், ஹாஸ்பிடல் போன்ற பல்வேறு பிரிவுகள் உள்ளன. இதை சரியான முறையில் தேர்வு செய்து படிக்க வேண்டும்.

மேலாண்மை துறை, தனியார் நிறுவனங்களில் படிப்பதற்கும், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற நிறுவனங்களில் படிப்பதற்கும் வேறுபாடு உண்டு. நுழைவுத் தேர்விலும் தரம் உண்டு. எனவே, தரமான கல்லூரியையோ, நிறுவனத்தையோ கவனித்து தேர்வு செய்ய வேண்டும்.

தொலைநிலைக் கல்வியில் படிக்கும் எம்.பி.ஏ.,பட்டங்கள், அங்கீகாரம் பெற்ற பட்டங்களாக இருக்க வேண்டும். தொலைநிலைக் கல்வி நிறுவனங்கள் பல நுழைவுத் தேர்வு எழுதி, பட்டங்களை வழங்குகின்றன. இதில், கவனமுடன் படிப்பை தேர்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு சென்னை பல்கலை பேராசிரியர் காஜா ஷெரீப் பேசினார்.

நன்றி: கல்வி மலர் http://www.kalvimalar.com/tamil/NewsDetails.asp?id=3011