திங்கள், 24 பிப்ரவரி, 2025

என்னதான் வேணும்?எண்ணெ(ய்) தான் வேணும்!

இதயத்திற்கு இதமானது என்கிற முழக்கத்தோடு தான் இந்தியாவிற்கு சில எண்ணெய்கள் அறிமுகமாகி விற்பனைக்கு வந்தது. 'இன்னும் கடலை எண்ணெய் தான் யூஸ் பண்றிங்களா?

அதுலே கொழுப்பு இருக்கு அதனாலே இதய நோய் பிரச்சினையெல்லாம் வருதாம் சன் பிளவர் எண்ணெய் யூஸ் பண்ணுங்க அதுலே தான் கொழுப்பு இல்லை' என்று 90-களின் ஆரம்பத்தில் இப்படி ஒரு கற்பிதம் விதைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

1960 -ம் காலகட்டத்தில் தான் இந்தியாவில் சூரியகாந்தி எண்ணெய் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும் ..

1991-ல் தொடங்கிய தாராளமயமாக்கலுக்கு  பின்னரே நாட்டில் உணவு, உடை மற்றும் கலாச்சார, பாவனைகள் என்று பெருமளவு மாற்றங்கள் ஏற்பட்டன. 

சூரியகாந்தி எண்ணையை ரஷ்யா, உக்ரைன், துருக்கியில் இருந்தும், சோயா எண்ணெயை அர்ஜென்டினா, பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்தும், மேலும் பாமாயிலைஇந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2025

அசர் மல்லி - நறுமணங்களின் முகவரி

 நறுமணங்களின் முகவரிப் பூக்கள் என்பார்கள். நறுமணம் தரும் உயர்தர பூக்களிலிருந்து, சாதாரணப் பூக்கள் வரை அனைத்து பூக்களும் காலையில் பூத்து மாலை அல்லது இரவுக்குள் மடிந்து விடும், வதங்கி விடும். 

ஆனால் பொழுது சாயும் நேரத்தில் பூக்கும் பூ ஒன்று உள்ளது தெரியுமா?

ஊரே உறங்கும் நேரத்தில் இரவு வாட்ச் மேனாக,ஆந்தை விழித்திருப்பது போல், அந்தி சாய்ந்து அனைத்தும் மலர் வகைகளும் உறங்கும் நேரத்தில் அடர்த்தியான ரோஸ் ,வெள்ளை மற்றும் மஞ்சள் என்று அழகிய மூன்று வித வண்ணங்களிலும், அந்த மூன்று வித வண்ணங்களும் கலந்து ஒட்டுச் சாதி போன்று ஒன்றும் என நான்கு விதங்களில் பூக்கும்.

இரவெல்லாம் கொட்ட, கொட்ட விழித்திருந்து காலையில் உறங்கி போகும்.

தமிழில் அந்திமல்லி அல்லது அந்திமந்தாரை என்று அழைப்பார்கள். மலையாளத்தில் 'அசர் முல்ல' (முல்லை தான் அது அந்த மொழியில் 'லை' என்ற பதத்தை அழுத்தி  சொல்ல மாட்டார்கள்) நம்ம ஊரில் அசருக்கு பிறகு பூப்பதால் அசர் மல்லி என்று அழைக்கிறார்கள்?! என்று நினைக்கிறேன்.


சிறு வயது முதல் அப்படி அழைத்தே பழகி விட்டது அதனால் வேறு காரணங்கள் தெரியவில்லை. அதன் தாவரவியல் பெயர் Mirabilis Jalapa Linn என்கிற வகையை சார்ந்தது.

ஞாயிறு, 5 ஜனவரி, 2025

தீன்! தீன்!

முஹம்மது நானா இருக்காங்களா? என அஹமது அவர் வீட்டின் கதவின் கொலுக்கை தட்டி பதட்டமாக கேட்டான்..

அரண்மனை சுவர் போல பர்மா தேக்கில் செய்த கதவில் ஐந்து கிலோ எடையுள்ள கொலுக்கு தொங்கியது. கதவை தட்டும் போது தவறி கொலுக்கின் நடுவில் கையின் விரல் சிக்கினால் சின்னாபின்னாமாகி விடும் போன்று பிரமாண்டமாக தொங்கிக் கொண்டிருந்தது முஹம்மது நானாவின் வீட்டு அழைப்பு மணி.

இரண்டு கட்டுக்களுடன் அமைந்துள்ள வீடு வேறு, நம் குரல் உள்ளே வரைக்கும் எட்டியிருக்குமா? என அவன் எண்ணும் போது...

யாரு..?  கொஞ்சம் இரிங்க..! நானா கொல்லையிலே இருக்காங்க, வருவாங்க சொல்லிருக்கேன் என்று உள் கட்டிலிருந்து பதில் வந்ததும்.. அவன் கொஞ்சம் திருப்தி அடைந்து அவர் வரும் வரை முஹம்மது நானா வீட்டு திண்ணையில் அமர்ந்தான் அஹமது.

ஆனால் அவனின் மனம் மட்டும் ஒருவித பதட்டதுடன் காணப்பட்டது. 

காரணம் அடுத்த வாரம் அஹமதுக்கு சுன்னத்(கத்னா) என்று வீட்டில் கூறியதும் அவனுடைய நட்பு வட்டங்களில் உள்ள சுன்னத் செய்யாத நண்பர்கள்  அவன் மனதில் சுன்னத் பற்றிய பலவித குழப்பங்களை  ஏற்படுத்தி விட்டார்கள் அதையே நினைத்து அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது தோளில்  தட்டி சொல்லுங்கனி.. என்ன விஷயமா தேடி வந்திருக்கியும்.? என்று முஹமது நானா அவன் நினைவை கலைக்கவும்...

உங்கள்'ட்டே ஒன்னு கேக்கலாம் வந்தேன் நானா, நீங்க தான் சொல்லனும் என தயங்கவும்..

சொல்லுங்கனி.. பிரோட்டு (டியூசன்) ஏதாவது எடுக்கனுமா?

இல்ல நானா எனக்கு  அரை பரீட்சை லீவுலே அடுத்த வாரம் சுன்னத் செய்ய போறதா சொன்னாஹோ அதுதான் உங்கள்ட்டே டவுட்டு கேட்டு போலாம்னு வந்தேன் என அஹமது சொன்னதும்...


முஹம்மது நானாவின் முகம் லேசான சுருக்கம் அடைந்தது. அது ஆச்சிரிய சுருக்கமா, கோப சுருக்கமா? அஹமதுக்கு விளங்காத போது, வெடிச் சிரிப்பாக சிரித்து, இதுலே என்ன டவுட்டுங்கனி ? என்றார் முஹம்மது நானா.

அஹமது உனக்கு சுன்னத்தா செய்றாஹ? அப்ப உனக்கு இருக்கு என்று கூட்டாளிவோல்லாம் பயமுறுத்திட்டானுவோ நானா. அதுதான் சுன்னத் செஞ்சா உசுரு போகுற மாதிரி வலிக்குமா நானா?