திங்கள், 25 ஆகஸ்ட், 2008

சவூதி ஓஜருக்கு ஆட்கள் தேவை!!

இன்ஷாஅல்லாஹ் வரும் 26 & 27 தேதிகளில் சென்னையில் சவுதி ஒஜர் கம்பெனிக்கு நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. 400 க்கும் மேற்பட்ட நபர்கள் தேவை (அனைத்து துறையிலும்). சென்னை என்பதனால் சுலபமாக சென்று முயற்சி செய்து பார்க்கலாம்.
முகவரி:-
Asiapower Overseas Employment Services
(Government Approved Recruiting Agent)
28, Aarti Arcade,
86, Dr. Radhakrishna Road,
Mylapore,Chennai - 600 004.
INDIA.
Tel : ( 0091 - 44 ) 2811 4437
Fax : ( 0091 - 44 ) 2811 1390
E-mail : chennai@asiapoweroverseas.com

அன்புடன் (தகவலுக்கு நன்றி)
Jamal - saudioger ltd. ரியாத்
மற்றும் அபூ சுஹைலாஹ் (முஸ்தஃபா)

ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2008

இறப்புச் செய்தி

பரங்கிப்பேட்டை அப்பாபள்ளித்தெருவில்,மர்ஹூம் முஹம்மது அலி கவுஸ் மரைக்காயர் அவர்களின் மகளாரும்,மர்ஹூம் D.ஜெய்னுல் ஆபிதீன் மரைக்காயர் அவர்களின் மருமகளாரும்,D.J.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மனைவியுமான முஹம்மது ஆயிஷா பீவி மர்ஹூம் ஆகிவிட்டார்கள். இன்று மாலை நல்லடக்கம் மீராப்பள்ளியில்..


தகவலுக்கு நன்றி: ஜனாப் M.E. அன்சாரி

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2008

பரங்கிப்பேட்டை பாலத்தில் வாகனவரி வசூலிப்பை நிறுத்த கோரிக்கை.




பரங்கிப்பேட்டை பக்கிம்காங் கால்வாய் குறுக்கே இருக்கும் பாலத்திற்கு அதன் ஒப்பந்த காலம் முடிந்தும் வாகனவரி வசூல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி தனியார் வாகனங்கள் மற்றும் வெளியூர் ஆட்களும் சிரமப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு தனியார் வாகனங்கள் ஊர் உள்ளே வருவதற்கு அதிகம் தயக்கம் காட்டுகின்றனர்.

பலருக்கும் இடைஞ்சலாக இருக்கும் இந்த வரம்பு மீறிய வாகனவரியை நிறுத்தகோரி கிரஸண்ட் நல்வாழ்வு சங்கம் (C.W.O.) சார்பில் மவாட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.