வெள்ளி, 19 டிசம்பர், 2008

புதுப்பள்ளி பரபரப்பு

புதுப்பள்ளி நிர்வாகத்திர்க்கென இன்று ( 19.08.2008) தேர்தல் நடத்த வக்ப் வாரியம் திட்டமிட்டு நாள் குறித்திருந்த வேளையில், பள்ளி நிர்வாகம் கோர்ட்டுக்கு சென்று ஸ்டே வாங்கி விட்டது. அதனால் இன்று தேர்தல் நடக்கவில்லை.

இன்று ஜும்ஆ முடிந்து நீண்ட நேரம் பெரும் கூட்டமாக மக்கள் வெளியில் நின்று இருந்தனர். பள்ளியின் நிர்வாகம் சீரமயாதது குறித்த அதிருப்தி அனைவரிடமும் இருந்தது. இந்நிலையில் கோர்ட்டில் ஸ்டே கோரி வழக்கு போட்ட ஃபஜூல் மாலிமார் வெளியில் வந்தபோது அவரிடம் சாத்வீகமாக கேள்வி கேட்க்க சிலர் சென்றதாகவும் அதை தொடர்ந்து சிறிது சலசலப்பானது. பிறகு அடி தடியாக ஆனது. பள்ளியில் நூற்றுக்கணக்கான பேர் திரண்டிருந்தனர். சில காலம் முன்பு நடந்ததை போல் அசம்பாவிதம் ஏதும் நடந்து விடுமோ என்று அனைவரும் பயந்து இருந்த நிலையில் பள்ளியினுள் நடந்த இந்த சம்பவத்தை சிலர் தடுத்து அமைதிபடுத்த முயற்சித்தனர். கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கும் மேலாக பள்ளிமிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

நிலைமை சற்று கட்டுக்கடங்குவதற்குள் ஆவதற்குள் போலீஸ் வந்தது. அவர்களுக்கு நிலைமையை ஆரம்பம் முதல் ஜுபைர் விளக்கினார். பிறகு ஜமாஅத் தலைவர் முஹமது யூனுஸ் வந்து சேர்ந்தார் . பிறகு வழக்கு கொடுக்க ஒரு தரப்பு யூனுஸ் அவர்களுடன் போலீஸ் ஸ்டேஷன் சென்றார்கள். கும்மத் பள்ளியில் ஏற்பட்ட இந்த சம்பவங்களினால் ஊர் முழுவதும் சற்று பரபரப்புடன்தான் வருகிறது.

வியாழன், 18 டிசம்பர், 2008

விவசாயக்குறிப்பு: மானிய விலையில் உளுந்து விதை.

பரங்கிப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நஞ்சைத் தரிசுக்கேற்ற டிஏயு1 ரக உளுந்து விதை பரங்கிப்பேட்டை வட்டார
(பரங்கிப்பேட்டை, பின்னத்தூர்) வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு உள்ளது. விவசாயிகள் யாரும் மானிய விலையில் (ரூ.56/கிலோ) பெற்றுப் பயனடையலாம்.


பரங்கிப்பேட்டை கோர்ட்டில் மாவட்ட கலெக்டர்.

கடந்த 2004 ஆம் ஆண்டில் சம்பவித்த ஆழிப்பேரலை(சுனாமி) பாதிப்புகளுக்கு; மனித மற்றும் கால்நடை உயிர்ப்பலிகளுக்கு மாநில அரசு உதவித்தொகை வழங்கியிருந்தது. அச்சமயம் கிள்ளையைச் சேர்ந்த நபர் ஒருவரும் கால்நடை மருத்துவர் ஒருவரும் முறைகேடாக 85 ஆடுமாடுகளின் பட்டியலுக்கு பணம் பெற்றதாக அரசுத் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இவ்வழக்கு பரங்கிப்பேட்டை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இக்காலகட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு அவர்கள் அரசுத் தரப்பாக முன்னிலையாகி நேற்று ஒருமணிநேரம் சாட்சியம் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.