புதன், 11 மார்ச், 2009
இறப்புச்செய்தி
பரங்கிபேட்டையை சேர்ந்த வாகன ஓட்டுனரும் ஜானி பாய் அவர்களின் மகனாருமான பொத்தி என்கிற செய்யது அஹ்மது அவர்கள் இன்று வபாஅத்தாகிவிட்டார்கள். அன்னாருக்காக சகோதரர்கள் பிரார்த்தனை செய்யுமாறு கோருகிறோம். இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.
செவ்வாய், 10 மார்ச், 2009
கடும் மணற்புயல் : ரியாதிலும் வானிலை மாற்றம்

மாறிவரும் வானிலை பரங்கிப்பேட்டையில் குளுமையை ஏற்படுத்த, ரியாதிலோ கடும் மணற்புயல். வாகனத்தில் செல்பவர்களுக்கு எதிரே உள்ளது/வருவது தெரியாத அளவுக்கு
கடும் மணற்காற்று வீசுகிறது.
வெளியே தலைகாட்ட முடியவில்லை.
சில நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. சாலைகளில் தத்தம் முகப்பு விளக்குகளின் ஒளிரும் வெளிச்சநம்பிக்கைகளைப் பற்றி நகரும் வாகனங்களுக்கு எறும்பினும் சற்றே வேகம் அதிகம்.
சில, பல விமான சேவைகளும் விலக்கப்படலாம் என்று தெரிகிறது.
இந்த மணற்புயலைப் போல கடந்த வருடங்களில் கண்டதில்லை என்று ரியாத் வாழ் தமிழர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சட்டென்று மாறியது வானிலை
இந்த கோடை வெயிலுக்கு மூனாருக்கோ கொல்லி மலைக்கோ தப்பித்து ஓடி விட பரங்கி மகா ஜனங்கள் சிலர் திட்டமிட்டு இருந்திருக்கலாம். ஆனால், கடந்த இரண்டு நாட்க்களாக ஊட்டியை தூக்கியடிக்கும் ரம்மியமான பரங்கிபேட்டை கிளைமேட்டை பார்த்து அவர்கள் நிச்சயம் தங்கள் திட்டத்தை மாற்றி கொண்டிருப்பார்கள்.
சில வாரங்களாக கொளுத்தி எடுத்த வெயிலுக்கு பதில் செய்வது போல் இதமான தூறல், அழகான காற்று, மிதமான மழை என்று களை கட்டுகிறது பரங்கிபேட்டை சீதோஷன நிலை.
இதோ இப்போது கூட, இருண்ட வானமும், அது பொழியும் ஜில் மழையும், அது தரும், உடம்பை ஊடுருவும் குளிருடனும் இந்த பதிவினை பதிக்கிறோம். (வெளிநாட்டு சகோஸ்... பொறாமை தவிர்க்க)
இந்த திடீர் பருவ மாற்றத்தின் ஒரே ஒரு சந்தோஷ முரண் : வழக்கமாக காலை 8 - 10 போகும் கரண்ட் கூட இன்று போகவில்லை. (இப்ப தானே சொல்லி இருக்கோம்....)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...