சனி, 18 டிசம்பர், 2010
இறப்புச் செய்தி
வியாழன், 16 டிசம்பர், 2010
கலில் அஹ்மத் கீரனூரி ஹஜ்ரத்
பரங்கிப்பேட்டை அருகே அரசு அனுமதியின்றி கிளிஞ்சல்கள் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்; டிரைவர் கைது
பரங்கிப்பேட்டை அருகே அரசு அனுமதியின்றி கிளிஞ்சல்கள் ஏற்றி சென்ற லாரியை போலீசார் பறி முதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.
புதுவையில் இருந்து கடலூர் வழியாக சிதம்பரம் நோக்கி ஒரு லாரியில் கார்பைட் கல் செய்ய பயன்படுத்தக்கூடிய ஆற்று கிளிஞ்சல்கள் கடத்தப்பட்டு வருவதாக கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்து, அந்த லாரியை பிடிக்க உத்தரவிட்டார்.
அதைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, போலீஸ் ஏட்டுகள் ரவி, விஜய குமார் மற்றும் போலீசார் பி.முட்லூர் பகுதிக்கு விரைந்து வந்து அந்த வழியாக தார்பாய் போட்டு வந்த ஒரு லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
சோதனையில் அந்த லாரியில் எவ்வித ஆவணம் இல்லாமல், அரசு அனுமதியின்றி கிளிஞ்சல்களை காரைக்காலுக்கு ஏற்றிச் சென்றது தெரிய வந்தது. அதைதொடர்ந்து லாரி டிரைவர் புவனகிரி அருகே உள்ள மதுராந்தகநல்லூரை சேர்ந்த வேலாயுதம் மகன் காத்தவராயன் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Source: Daily Thanthi - Photo: MYPNO
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...