சனி, 18 டிசம்பர், 2010

இறப்புச் செய்தி

காஜியார் சந்தில் மர்ஹும் ஜே.உதுமான் அலி அவர்களின் மகளாரும், இசட்.முஹம்மது நெய்னா அவர்களின் மனைவியும், எம். அன்வர் அலி, மர்ஹும் கவுஸ் மியான் இவர்களின் தாயாரும், என். ஜவஹர் அலி, முஹம்மது பாருக், முஹம்மது நாசர், முஹம்மது கஜ்ஜாலி இவர்களின் பாட்டியாருமாகிய முஹம்மதா பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் மீராப்பளியில்.
இன்னாலில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்.

வியாழன், 16 டிசம்பர், 2010

கலில் அஹ்மத் கீரனூரி ஹஜ்ரத்

திண்டுக்கல் யூசுபியா மதரசாவின் முதல்வரும்,முதுபெரும் மார்க்க அறிஞரும் சிறந்த பேச்சாளருமான கலீல் அஹ்மத் கீரனூரி ஹஜ்ரத் அவர்கள் இன்று மாலை மர்ஹுமாகிவிட்டார்கள். இன்ஷா அல்லா நாளை காலை நல்லடக்கம் கீரனூரில்.

.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

பரங்கிப்பேட்டை அருகே அரசு அனுமதியின்றி கிளிஞ்சல்கள் ஏற்றி சென்ற லாரி பறிமுதல்; டிரைவர் கைது

படிமம்:LittleNeck clams USDA96c1862.jpgபரங்கிப்பேட்டை அருகே அரசு அனுமதியின்றி கிளிஞ்சல்கள் ஏற்றி சென்ற லாரியை போலீசார் பறி முதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.

புதுவையில் இருந்து கடலூர் வழியாக சிதம்பரம் நோக்கி ஒரு லாரியில் கார்பைட் கல் செய்ய பயன்படுத்தக்கூடிய ஆற்று கிளிஞ்சல்கள் கடத்தப்பட்டு வருவதாக கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்து, அந்த லாரியை பிடிக்க உத்தரவிட்டார்.

அதைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, போலீஸ் ஏட்டுகள் ரவி, விஜய குமார் மற்றும் போலீசார் பி.முட்லூர் பகுதிக்கு விரைந்து வந்து அந்த வழியாக தார்பாய் போட்டு வந்த ஒரு லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.

சோதனையில் அந்த லாரியில் எவ்வித ஆவணம் இல்லாமல், அரசு அனுமதியின்றி கிளிஞ்சல்களை காரைக்காலுக்கு ஏற்றிச் சென்றது தெரிய வந்தது. அதைதொடர்ந்து லாரி டிரைவர் புவனகிரி அருகே உள்ள மதுராந்தகநல்லூரை சேர்ந்த வேலாயுதம் மகன் காத்தவராயன் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Source: Daily Thanthi - Photo: MYPNO