திங்கள், 14 மார்ச், 2011

இறப்புச் செய்தி

தெசன் தைக்கால் தெருவில் மர்ஹூம் நூர்தீன் மரைக்காயரின் மகளாரும் மர்ஹூம் மானா மூனா என்கிற முஹம்மது யூசுபு அவர்களின் மனைவியும் N. நகுதா மரைக்காயரின் சகோதரியும் M.Y.முஹம்மது மெய்தீன் M.Y. முஹம்மது பாருக் M.Y.ஜாகீர் ஹுஸேன் M.Y.செய்யது அஹ்மது இவர்களின் தாயாருமாகிய பீ என்கிற முஹம்மது பீவி அவர்கள் மர்ஹூம் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை (15-03-2011) காலை 10 மணிக்கு நல்லடக்கம் கும்மத்துப்பள்ளியில்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


தகவல்: சித்திக்

ஞாயிறு, 13 மார்ச், 2011

சிதம்பரம் தொகுதியை ஒதுக்க கோரிக்கை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம்

பரங்கிப்பேட்டை : தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம் தொகுதியை கேட்டு பெற இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் அமானுல்லா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் சுக்கூர், மாவட்ட ஆலோசகர் கப்பார் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் அப்துல் கப்பார்கான் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மாநில பட்டதாரி அணி அமைப்பாளர் ரஷீதுஜான் பேசினார்.

கூட்டத்தில், தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மூன்று தொகுதிகளில் ஒன்று குறையாமல் போட்டியிட வேண்டும். வெற்றி வாய்ப்புள்ள சிதம்பரம் தொகுதியை கேட்டு பெற வேண்டும் உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Source: Dinamalar

சிதம்பரம் தொகுதி தி.மு.க.,வில் ஆதரவாளர்களுக்காக 50 பேர் மனு

பரங்கிப்பேட்டை : சிதம்பரம் தொகுதி தி.மு.க.,வில் தனது ஆதரவாளர்களுக்கு சீட் கேட்டு 50க்கும் மேற்பட்டோர் கட்சியில் மனு கொடுத்துள்ளனர்.

தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம் தொகுதியை தி.மு.க.,விற்கு ஒதுக்க வேண்டும் என முக்கிய நிர்வாகிகள் கட்சி தலைமையிடம் கேட்டு வருகின்றனர்.

தி.மு.க., சார்பில் போட்டியிட ஒன்றியக்குழு தலைவர்கள் செந்தில் குமார், முத்து பெருமாள், மாமல்லன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ., சரவணன், பரங்கிப்பேட்டை பேரூராட்சி தலைவர் முகமது யூனுஸ் உட்பட 31 பேர் சீட்டு கேட்டு விருப்பமனு கொடுத்துள்ளனர்.

அதில் செந்தில் குமார், முத்து பெருமாள், மாமல்லன், முன்னாள் எம்.எல்.ஏ., சரவணனுக்கு என ஒவ்வொருவருக்கும் 10க்கும் மேற்பட்டோர் பரிந்துரை செய்து கட்சி தலைமையில் மனு கொடுத்துள்ளனர்.

Source: Dinamalar