திங்கள், 16 மே, 2011

இறப்புச் செய்தி

கிதர்சா மரைக்காயர் தெருவில் மர்ஹும் மரக்கச்சி மரைக்காயரின் மகளாரும், மர்ஹும் மெக்தார் சாஹிப் அவர்களின் மனைவியும், மரக்கச்சி மரைக்காயர், கஜ்ஜாலி இவர்களின் தாயாருமான மைமுன் பீவி மர்ஹும் ஆகிவிட்டார்கள். இன்று மாலை 4 மணிக்கு புதுப்பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.





தகவல்: sky news

செல்வி ராமஜெயம் என்கிற நான்.... (வீடியோ!)

தமிழக அமைச்சராக இன்று  சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் செல்வி ராமஜெயம் பதவியேற்றுக்கொண்டார்.  கவர்னர் பர்னாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அப்போது செல்வி ராமஜெயம் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி: ‘’செல்வி ராமஜெயம் என்னும் நான் சட்டப்படி அமைக்கப்பட்ட  இந்திய அரசியல் அமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும்,  மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும்,  இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும்,  ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும்,

தமிழ்நாட்டு அரசின்
அமைச்சராக, உண்மையாகவும், உளச்சான்றின் படியும்,    என் கடமைகளை
நிறைவேற்றுவேன் என்றும்,  அரசியல் அமைப்பிற்கும், சட்டத்திற்கும் இணங்க,   அச்சமும், ஒருதலை சார்பும் இன்றி,  விருப்பு, வெறுப்பை விளக்கி,    பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும்,    நேர்மையானதை செய்வேன் என்றும்,    ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.


வீடியோ: எஸ்.ஏ. ரியாஸ் அஹமத்.

ஞாயிறு, 15 மே, 2011

சமூக நலத்துறை அமைச்சராகிறார் செல்வி ராமஜெயம்!

புவனகிரி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள பரங்கிப்பேட்டையை சார்ந்த செல்வி ராமஜெயம் அமையப் போகும் தமிழக அமைச்சரவையில் இடம்பெற உள்ளார். ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை நாளை பதவி ஏற்க இருக்கிறது. இதில் செல்வி ராமஜெயத்திற்கு சமூக நலத்துறை ஒதுக்கப்படுகிறது. இரண்டாவது முறையாக வெற்றியை தக்க வைத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. புவனகிரி தொகுதியிலிருந்து பரங்கிப்பேட்டை சிதம்பரம் தொகுதியில் இணைக்கப்ட்டுவிட்டாலும், பரங்கிப்பேட்டையில் இவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி பலரும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.