இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் பவாணி, ஜெயபால் தலைமை தாங்கினார். மாவட்ட தலைமை அமைப்பாளர் அழகப்பா, ராஜகோபால் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பேரூராட்சி மன்ற தலைவர் முஹம்மது யூனூஸ் கலந்துக் கொண்டார். ஊர்வலம் பரங்கிப்பேட்டை, அகரம் வீரப்ப பூங்காவிலிருந்து பஸ்நிலையம் வழியாக கச்சேரித் தெருவில் உள்ள மனித உரிமைகள் கழக அலுவலகத்தை அடைந்தது. இதில் மாவட்ட அமைப்பாளர்கள் ஜெயராமன், லோகநடேசன், மாவட்ட துணை அமைப்பாளர் ராஜேந்தின், மாவட்ட வழக்கறிஞர் சுதாகர், மாவட்ட நிருபர் ரவி, நகர அமைப்பாளர் மாரியப்பன், துணை அமைப்பாளர் முத்துகுமார், ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட புரலவர் முத்து குமரன், செய்திபிரிவு கார்த்திகைபாலன், மகளிர் அணி தாட்சாயிணி, இளஞர் அணி அலி அக்பர் மற்றும் உத்ராபதி, வடிவேல், இளங்கோ முடிவில் குமார் அவர்கள் நன்றி கூறினார்.
மேலும் வாசிக்க>>>> "இலங்கை தமிழர்கள் படுகொலை கண்டித்து மெளன ஊர்வலம்"