தேர்வு முடிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்வு முடிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 ஜூன், 2009

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 இறுதி தேர்வு முடிவு வெளியீடு! இணையதளத்தில் பார்க்கலாம்!!

தமிழக அரசு பணியில் துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., வணிக வரி அதிகாரி, கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர், பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர், ஊராட்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி ஆகிய பதவிகளில் 172 காலி இடங்களை நிரப்ப கடந்த ஆண்டு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

அதில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதி முதல் ஜனவரி 3-ந் தேதி வரையும், மேலும் மே மாதம் 22-ந் தேதியும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், இறுதி தேர்வு முடிவு நேற்று மாலை வெளியிடப்பட்டது.

வெற்றி பெற்றவர்களின் பதிவு எண் பதவி வாரியாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்திலும் (www.tnpsc.gov.in) பார்க்கலாம்.

ஞாயிறு, 17 மே, 2009

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு 28-ந்தேதி வெளிவருகிறது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 6541 பள்ளியில் இருந்து 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 மாணவ- மாணவிகள் பரீட்சை எழுதினார்கள்.

இவர்களில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 512 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 25 ஆயிரத்து 835 பேர் மாணவிகள்.

பத்தாம் வகுப்பு மெட்ரிக்குலேசன் பாடத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 287 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

சென்னையில் 16,369 பேர் பரீட்சை எழுதினார்கள்.

10-ம் வகுப்பு ஆங்கிலோ இந்தியன் பாடத் திட்டதின் கீழ் 4697 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர்.

ஓ.எஸ்.எல்.சி. பாடத்திட்டம் கீழ் 1361 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்.

விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து மதிப்பெண் பதிவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஓரிரு நாட்களில் இந்த பணியும் நிறைவடைகிறது.

பிளஸ்-2 தேர்வு முடிவு இந்த ஆண்டு தாமதமாக வெளியிடப்பட்டது.

பாராளுமன்ற தேர்தல் நடந்ததால் கடந்த ஆண்டை விட 5 நாட்கள் தாமதமாக முடிவு வெளியானது.

இதனால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு தள்ளிப்போகிறது.

வருகிற 28-ந்தேதி தேர்வு முடிவு வெளியாக வாய்ப்பு உள்ளது.

அதற்கு முன்னதாக வெளியிட தேர்வுத் துறை தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது.

பிளஸ்-2 மாணவர்களுக்கு 25-ந்தேதி மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகின்றன.

டேட்டா சென்டரில் மதிப்பெண் பட்டியல் பிரிண்ட் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

22-ந்தேதிக்குள் இந்த பணிகள் முடியும் அதன் பிறகு மாவட்ட வாரியாக மதிப்பெண் பட்டியல் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

பிளஸ்-2 தேர்வு : கடலூர் மாவட்டம் 75 சதவீதம் தேர்ச்சி!

பிளஸ்-2 தேர்வில் கடலூர் மாவட்டத்தில் மாணவர்களை விட மாணவிகள், அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளனர்.

கடலூர் மாவட்ட பிளஸ்-2 தேர்வு முடிவுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் குப்புசாமி, வியாழக்கிழமை வெளியிட்டார்.


மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஜவகர், குருநாதன், மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.


மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூறியது:


கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகள் 66, நலத்துறைப் பள்ளிகள் 9, நகராட்சிப் பள்ளி 1, அரசு உதவிபெறும் பள்ளிகள் 29, சுயநிதிப் பள்ளி 1, மெட்ரிக் பள்ளிகள் 42 உள்ளிட்ட 148 பள்ளிகளைச் சேர்ந்த 23,655 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்.


அவர்களில் மாணவர்கள் 11,426. மாணவிகள் 12,229.


தேர்வு எழுதிய மாணவர்கள் 11,426-ல் 8,114 பேரும், மாணவிகள் 12,229 பேரில் 9548 பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவர்கள் 71.01 சதமும், மாணவிகள் 78.08 சதமும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 63.77.


கடலூர் கல்வி மாவட்டத்தில் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 79.16 சதம்.


கடலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் 74.66 சதம்.


கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 71 சதம். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 3.66 சதம் தேர்ச்சி அதிகரித்து உள்ளது என்றார் குப்புசாமி.

புதன், 13 மே, 2009

அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு! +2 முடிவு நாளை வெளியாகிறது!! நாளையே பள்ளிகளில் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்!!!

ஏழு லட்சம் மாணவ-மாணவிகள் ஆவலுடன் எதிர்பார்த்த +2 தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. இந்த தகவலை பள்ளிக் கல்வி இயக்குனர் பி. பெருமாள்சாமி அறிவித்துள்ளார்.

+2 தேர்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கியது.

மாணவர்களின் வாழ்க்கையில் திருப்பு முனையாக விளங்குவது +2 தேர்வு. இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை கொண்டுதான் அவர்கள் டாக்டர்களாகவோ, என்ஜினீயர்களாகவோ, அறிவியல் மற்றும் கலை பட்டதாரிகளாகவோ வரமுடியும்.

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த +2 தேர்வை 5 ஆயிரத்து 40 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 6 லட்சத்து 47 ஆயிரத்து 630 பேர் 1,738 மையங்களில் எழுதினார்கள். இவர்களில் 3 லட்சத்து 4 ஆயிரத்து 900 பேர் மாணவர்கள். 3 லட்சத்து 42 ஆயிரத்து 730 பேர் மாணவிகள்.

கடந்த ஆண்டைவிட 54 ஆயிரத்து 326 பேர் கூடுதலாக எழுதினார்கள்.

தீவிர பாதுகாப்பு

புதுச்சேரியில் 29 மையங்களில் 87 பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 965 பேர் எழுதினார்கள். சென்னையில் 435 பள்ளிகளைச் சேர்ந்த 47 ஆயிரத்து 860 பேர் எழுதினார்கள். இவர்கள் தவிர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்தேர்வர்கள் 41 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.

இந்த வருடம் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு வினாத்தாள் இருப்பு மையங்களிலும், தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பறக்கும் படையினரும் மிகவும் தீவிரமாக ஈடுபட்டனர். தேர்வு மார்ச் 23-ந் தேதி முடிவடைந்தது.

நாளை வெளியாகிறது

இந்த நிலையில் 7 லட்சம் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த +2 தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) காலை வெளியிடப்படுகிறது.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் பி.பெருமாள்சாமி நேற்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மார்ச் 2009-ல் நடைபெற்ற மேல்நிலை பொதுத்தேர்விற்கான முடிவை, 14-ந் தேதி (நாளை) காலை 9 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் வெளியிடுகிறார்.

அதே நேரத்தில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் அவர்கள் படித்த பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் மூலமாக மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

இணையதளத்தில்

பின்வரும் இணையதளங்கள் மற்றும் செல்போன் எண்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் எண்ணிலும் (1250108), பி.எஸ்.என்.எல். மொபைல் எண்ணிலும் (1250108) தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்டவாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மொபைல் போனில்...

தினத்தந்தி வாசகர்கள் +2 பரீட்சை மதிப்பெண்களை தெரிந்து கொள்ள உங்கள் மொபைல் போனில் DTHSC என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் பரீட்சை எண்ணையும் டைப் செய்து 54545 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் உங்கள் மதிப்பெண் பட்டியல் சில வினாடிகளில் உங்கள் மொபைல் போனில் வரும்.