புதன், 27 பிப்ரவரி, 2008

SSLC & ப்ளஸ் 2 மாணவர்களுடன் கல்விக்குழு நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சி!

அரசுப் பொதுத் தேர்வினைக் எதிர்கொள்வது குறித்தும், அடுத்து என்ன படிக்கலாம் என்பதைப் பற்றியும் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களுடன் ஒரு கலந்துரையர்ல் நிகழ்ச்சிக்கு கல்விக்குழு நேற்று ஏற்பாடு செய்து மக்தூம் அப்பா பள்ளியில் நடத்தியது. கல்விக்குழுத் தலைவர் ஹமீத் மரைக்காயர் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு பங்கேற்பாளர்களாக அ.பா. கலீல் அஹமது பாக்கவி மற்றும் இப்னு ஹம்துன் அவர்களும் கலந்துக் கொண்டு மாணவர்களடன் கலந்துரையாடல் நிகழ்த்தினர். மாணவர்களின் கேள்விகளுக்கு ஹமீத் பதிலளித்தார். கல்வியின் அவசியத்தை இப்னு ஹம்துன் வலியுறுத்தி பேசினார். கலீல் அஹமத் பாகவியின் உரை எல்லோராலும் ரசிக்கும்படியாகவும் மாணவர்களை சிந்திக்க தூண்டியதாகவும் அமையப்பபெற்றது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக இருந்தது.

திங்கள், 25 பிப்ரவரி, 2008

CWO சார்பாக பரங்கிப்பேட்டையில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம்

CWO சார்பாக பரங்கிப்பேட்டையில் இலவச ஹோமியோபதி மருத்துவ முகாம் நடைபெற்றது.கிரஸண்ட் நல்வாழ்வு சங்கமும், புவனகிரி ஆயிஷா ஹோமியோ கிளினிக்கும் இணைந்து பரங்கிப்பேட்டையில் இரண்டாவது முறையாக இலவச ஹோமியோ மருத்துவ முகாம் (24-02-08) நடைபெற்றது. பல்வேறு நோய்களுக்கு இலவச சிகிச்சையும் மருந்தும் வழங்கப்பட்டது. இந்த முகாமின் மூலம் சுமார் 50 பேர் பயனடைந்தனர். இச்சிறப்பு முகாம் மீராப்பள்ளி தெருவில் உள்ள கிரஸண்ட் அலுவலகத்தில் நடைபெற்றது.

புதன், 20 பிப்ரவரி, 2008

ITJ சார்பாக பரங்கிப்பேட்டையில் மார்க்க விளக்க தெரு முனை பிரச்சாரம்!

பரங்கிப்பேட்டை டில்லி சாஹிப் தர்கா வளாகத்தில் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (ITJ) சார்பாக மார்க்க விளக்க தெரு முனை பிரச்சாரம் நடைப்பெற்றது. கூட்டத்தில் மவ்லவி. S.I. அப்துல் காதிர் மதனி "சமூக தீமைகள்" என்ற தலைப்பிலும், ஆலிமா ஹமீதுன்னிசா "ஸபர் மாதம் ஓர் ஆய்வு" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் திரளாக பெண்களும் ஆண்களும் கலந்துக்கொண்டு பயனடைந்தனர்.
மதரஸா மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை நகர துனைத்தலைவர் ஐ. ஹபீப் முஹம்மது பரிசளித்து சிறப்புரையாற்றினார்.