திங்கள், 24 மார்ச், 2008

மழையால் மீராப்பள்ளி குளம் பாதிப்பு


பரங்கிப்பேட்டையில் தொடர்ந்து பெய்து வந்த மழையினால் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சாலைகளும் சேதமடைந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதற்கான நிவாரண பணிகளும் நடைபெற்று வருகிறது.இந்த மழையினால் மீராப்பள்ளி குளத்தின் கபரஸ்தானை ஒட்டியுள்ள பக்கச்சுவர் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதற்கு மீராப்பள்ளி நிர்வாகம் உடனே நடவடிக்ககை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்

ஞாயிறு, 23 மார்ச், 2008

கல்விக்குழு சார்பாக மாணவர் நிகழ்ச்சி


கல்விக்குழு சார்பாக 23.03.08 ஞாயிறு காலை 9 மணியளவில் ஓரியன்டல் பள்ளியில் முஹம்மது நபி(ஸல்) என்ற தலைப்பில் மாணவ மாணவியருக்கான பிரசங்க நிகழ்ச்சி நடைபெற்றது. டி.வி., சினிமா போன்ற பெருகி வரும் அனாச்சாரங்களுக்கிடையில், நமது சிறார்களுக்கான சரியான முன்மாதிரி யார்? என்பதை விளக்கும் வகையில் முஹம்மது (ஸல்) அவர்கள பற்றி ஜனாப் எஸ்.ஐ. அப்துல் காதிர் மதனி அவர்கள் மாணவர்களுக்கேற்ப அழகிய உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில், முஹம்மது(ஸல்) அவர்களின் சிறப்புக்களயும், உலகில் மற்றெவரையும்விட அவர்கள நாம் நேசிக்க வேண்டிய அவசியத்தையும், நடிகர்கள், அரசியல்வாதிகள ரோல்மாடல்களாக எடுக்காமல், நமது வாழ்வின் அனைத்து நிலைகளிலும் முஹம்மது(ஸல்) அவர்களயே அழகிய முன்மாதிரியாக கொள்ளவேண்டும் என்றும் மாணவமாணவியரிடம் விளக்கி பேசினார்கள். பிறகு, பேசப்பட்ட விஷயங்கள் குறித்து சிறிய கேள்விபதில் நிகழ்ச்சியும், (குவிஸ்) மாணவர்தம் ஆளுமைதிறன் வளர்க்க பேச்சுப்போட்டியும் நடத்தப்பட்டு பரிசுகள் (கலந்துகொண்ட அனைவருக்கும்) வழங்கப்பட்டது. இந்நிகழச்சிக்கான அழைப்பு நோட்டிஸ், பேனர் செலவெதுவுமில்லாமல், மஸ்ஜித், பள்ளிகூடங்கள், அதிகாலை குர்ஆன் மக்தப் வகுப்புகளுக்கு சென்று மாணவ மாணவியரை நேரில் சென்று அழைத்தல் போன்ற முறைகள் கையாளப்பட்டன. அனைத்து செலவுகளும் பிள்ளகளுக்கே சென்றடையுமாறு (பரிசுகள், உண்டிகள்) பார்த்துகொள்ளப்பட்டது. சிற்றுண்டியாக, வித்தியாசமாக (சத்தான) சுண்டல், அவுல் மற்றும் பிஸ்கட் தரப்பட்டது.

சனி, 22 மார்ச், 2008

பரங்கிப்பேட்டையில் நேற்று 36 மி.மீ மழை பதிவு

வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த நிலையால் பரங்கிப்பேட்டையில் நல்ல மழை பெய்ததது. இதனால் பரங்கிப்பேட்டையின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. நேற்று பதிவான அளவின்படி 36 மி.மீ மழை பெய்துள்து. தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் பல குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றியிருக்கும் விவசாயிகளுக்கும் இம்மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்திலேயே பரங்கிப்பேட்டையில் அதிக மழை பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.