பரங்கிப்பேட்டை நடுநிலைப்பள்ளியொன்றில் சத்துணவில் வண்டுகள் காணப்பட்ட அவலம் குறித்து இன்றைய தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
மதிய உணவில் வண்டுகள் இறந்து கிடந்த சம்பவம் பரங்கிப்பேட்டை பள்ளி சத்துணவு பொறுப்பாளர் உள்பட 3 பேர் தற்காலிக பணி நீக்கம். வட்டார வளர்ச்சி அதிகாரி நடவடிக்கை
பரங்கிப்பேட்டை, ஏப்.22-
பரங்கிப்பேட்டை பள்ளிக்கூடத்தில் மதியஉணவில் வண்டுகள் இறந்து கிடந்த சம்பவத்தையொட்டி சத்துணவு பொறுப்பாளர் உள்பட 3 பேரை தற்காலிக பணி நீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டார்.
240 மாணவர்கள்
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கும்மத்துப் பள்ளி தெருவில் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் நடு நிலைப்பள்ளி உள்ளது.இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை சுமார் 240 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
அதில் 140 மாணவ- மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர்.அதபோல் கடந்த 17-ந் தேதி அன்று மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.அப்போது மதிய உணவில் வண்டுகள் இறந்து கிடந்தன.இதனால் மாணவர்கள் யாரும் மதிய உணவு சாப்பிடாமல் சாப்பாட்டை கீழே கொட்டி விட்டு சென்றனர்.இந்த சம்பவம், சமையல் செய்யும் போது அரிசி, பருப்பு ஆகிய வற்றை சரியான முறையில் சுத்தம் செய்யாதது தான் காரணம் என்று மாண வர்களின் பெற்றோர் குறை கூறினர்.
3 பேர் தற்காலிக பணிநீக்கம்
தகவல்அறிந்த வட்டார வளர்ச்சி அதிகாரி ராமச்சந்திரன் கும்மத்துப்பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி னார்.விசாரணையில் சமையல் பொறுப்பாளர் மகுடேஸ்வரி,சமையலர் குஞ்சம்மாள்,உதவியாளர் காஞ்சனாஆகியோரின் தவறு தலால் தான் இந்தசம்பவம் நடந்தது என்பதை அறிந்தார்.அதையடுத்து அதற்கு காரணமான சத்துணவு பொறுப் பாளர் மகுடேஸ் வரி,சமையலர் குஞ்சம்மாள்,உதவியாளர் காஞ்சனா ஆகிய 3 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து வட்டார வளர்ச்சி அதிகாரி ராமச்சந்திரன் நடவடிக்கை மேற்கொண்டார்.
தகவலுக்கு நன்றி: Mr.Syed (Haja Mohideen)
(கேடயக்குறிப்பு: நமதூர் சம்பந்தப்பட்டதென்பதால் இன்றைய தினத்தந்தி செய்தியை கூடுதல் குறைவின்றி 'அப்படியே' எடுத்தாளப்பட்டுள்ளது. எனவே, ஏன் தம்மைக் குறிப்பிடவில்லை என்று 'குளவிகள்' கோபித்துக்கொள்ளவேண்டாம்:-))))
செவ்வாய், 22 ஏப்ரல், 2008
சுன்னத் வல் ஜமாஅத் முப்பெரும் விழா

பரங்கிப்பேட்டை சுன்னத் வல் ஜமாஅத் சார்பாக மீலாது விழா, குத்பு முஹையதீன் நினைவு சொற்பொழிவு மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் அலுவலகம் திறப்பு ஆகிய முப்பெரும் விழா கும்மத்பள்ளித்தெருவில் நடைபெற்றது. ஜமாஅத் தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் அவர்கள் அலுவலகத்தை திறந்து வைக்க, ஷேக் அப்துல்லா ஜமாலி, முதலானோர் கலந்து கொண்டு உரையாற்றினர். கூட்டத்தில் முன்னதாக பேசிய முஹம்மது காஸிம் என்பவர் தனது உரையில் முஹம்மது நபி ரசூல் (ஸல்) அவர்களின் கால் செருப்பு அல்லாஹ்வின் அர்ஷைவிட உயர்வானது, அன்னை ஆமினாவின் மணிவயிறு அல்லாஹ்வின் அர்ஷைவிட மகத்தானது என்றெல்லாம் உளறியது அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியையும் அருவெருப்பினையும் ஏற்படுத்தியதை காண முடிந்தது. சுன்னத்ஜமாஅத் சகோதரர்கள் சிலரும் கூட தங்களுக்கு அந்த கருத்தில் உடன்பாடில்லை என்று பிற்பாடு தனிப்பட்ட முறையில் நம்மிடம் தெரிவித்தனர்.
வியாழன், 17 ஏப்ரல், 2008
சொற்பொழிவு மற்றும் கலந்தாய்வு நிகழ்ச்சி

கடந்த சில காலங்களாக பரங்கிப்பேட்டை முஸ்லிம் சமுதாயத்தின் கவனிக்கப்படாத கூறாக மாறி சீர்கேடுகளின் விளிம்புகளில் இருக்கும் இளஞர்கள பற்றி மிகுந்த அக்கறை கொண்டு அது பற்றிய ஒரு சொற்பொழிவு மற்றும் கலந்தாய்வு நிகழ்ச்சி அப்பாபள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்புரையாற்றிய சகோதர் ஜி.நிஜாம் அவர்கள் சக்திவாய்ந்த இளய சமுதாயம் கடந்த காலங்களில் எப்படியெல்லாம் வழி நடத்தப்பட்டது, தற்போது அதன் அவல நிலை பற்றியும் மிகவும் சிந்தனை தூண்டும் வகையில் பேசினார். வெளிச்சத்தில் தன்னை அடையாளப்படுத்திகொள்ள வேண்டிய நமதூர் இளஞர்கள், இருள்களில் ஒளிந்து கொண்டு வெளிச்சத்தை பார்க்கும் நிலை இருப்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து, இதற்கான தீர்வு பற்றி கலந்து கொண்ட சகோதரர்களிடம் ஆலோசனைகள கோரப்பட்டது.
வழிகாட்ட சரியான தலைமை இல்லாதது, தேவையற்ற செல்போன், பைக் கலாச்சாரம், பெற்றோர்களின் அதீத பரிவு மற்றும் அதீத கண்டிப்பு, தொடர் இஸ்லாமிய மார்க்க பிரச்சாரத்தில் தேக்கம், தகாத நண்பர்கள் சேர்க்கை, பொறுப்பினை அறியாமல் இருத்தல் (அ) தட்டி கழித்தல், திரைப்படங்களினால் மாற்றியமைக்கப்படும் சமுதாய மதிப்பீடுகள், வலிமையான ஜும்ஆ எனும் மிகப்பெரிய விஷயம் நீர்த்துபோன முறையில் பிசுபிசு உரையோடு கையாளப்படுதல், பெரும்பாலான தந்தைமார்கள் வெளிநாடுகளில் இருப்பதால் பிள்ளகளின் கண்டிப்பு மற்றும் கண்காணிப்பற்ற வளர்ச்சி போன்றவை முக்கிய காரணிகளாக முன்வைக்கப்பட்டன.
இளஞர்கள் குறித்த ஐக்கிய ஜமாஅத் மற்றும் இதர அமைப்புக்களின் நிலைப்பாடு மற்றும் செயற்பாடின்மையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.
தீர்வுகளாக, தஸ்கியா போன்ற தக்வா (இறையச்சம்) ஊட்டும் விஷயங்கள முன்னெடுத்தல், நன்னன்பர்களாக அவர்களுடனே ஊடாடி நன்மையை எத்திவைத்தல், விளயாட்டு போன்றவற்றில் கவனத்தை திசைதிருப்புதல் போன்றவை முன்வைக்கப்பட்டன. விளம்பரங்கள் ஏதும் செய்யப்படாத இச்சிறிய நிகழ்ச்சிக்கு கூடிய மிகஅதிகமான பங்கேற்கேற்பாளர்கள் சமுதாயம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்ற திருப்தியை அனைவர் உள்ளத்திலும் ஏற்படுத்தியது. அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...