ஞாயிறு, 10 மே, 2009
விவசாய படிப்பிற்கு 11ம் தேதி முதல் விண்ணப்பம்!
தேர்தல் விதிமுறைகளை மீறி பேசியதாக புகார்! திருமாவளவன் மீது பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு!!
பரங்கிப்பேட்டையில் தேர்தல் விதிமுறைகளை மீறி கூடுதல் நேரம் பேசியதாக விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன் நேற்று முன்தினம் இரவு பரங்கிப்பேட்டை நகர பகுதிகளில் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பரங்கிப்பேட்டை ஒன்றியமான சின்னூர், புதுப்பேட்டை, கரிக்குப்பம் ஆகிய பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் ஒன்றிய செயலாளர் முத்து. பெருமாள் தலைமையில் பொதுமக்களை சந்தித்து திருமாவளவன் வாக்கு சேகரித்ததாக தெரிகிறது.
அதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்ததாக பரங்கிப்பேட்டை போலீசார், விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் திருமாவளவன், ஒன்றிய செயலாளர் முத்து. பெருமாள் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வியாழன், 7 மே, 2009
அடையாள அட்டை இல்லாதோர் வாக்களிப்பது எப்படி?
தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் எப்படி வாக்களிப்பது என்பது குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.- பாஸ்போர்ட்
- ஓட்டுனர் உரிமம்
- வருமான வரி பான் அட்டை
- மத்திய மாநில அரசுகள் பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வழங்கிய போட்டாவுடன் கூடிய அடையாள அட்டை.
- அரசு வங்கிகள், தபால் அலுவலகங்கள் வழங்கிய பாஸ் புக்குகள் மற்றும் விவசாயிகளுக்கான பாஸ் புக்குகள்
- நிலம், வீட்டு விற்பனை பத்திரங்கள், மனை பட்டா
- பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி., எஸ்.டி. சான்றிதழ்கள்
- ஓய்வு ஊதிய ஆவணங்கள்
- சுதந்திர போராட்ட வீரர்களின் அடையாள அட்டை
- துப்பாக்கி லைசென்ஸ்
- உடல் ஊனமுற்றோர்க்கான சான்றிதழ்
- தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை
- மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள்.
இந்த 13 ஆவணங்களில் ஏதாவது ஒன்று இருந்தால் போதும். அதைக் காட்டி வாக்களிக்கலாம்.
சில நேரங்களில் குடும்பத் தலைவர் உள்பட குடும்பத்தில் வேறு சிலருக்கும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள், குடும்பத் தலைவர் மேற்கண்ட ஆவணங்களில் ஒன்றைக் காட்டினால் போதும், மொத்த குடும்பமும் அவருடன் சேர்ந்து வாக்களிக்கலாம். தனித் தனியாக அடையாள அட்டை தர தேவையில்லை.
இதை விட முக்கியம் வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இடம் பெற்றிருப்பது. அது இல்லாமல் இதில் எதைக் காட்டினாலும் வாக்களிக்க முடியாது. எனவே முதலில் வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை. எனவே 13ம் தேதி மறக்காமல், புகைப்பட அடையாள அட்டை அல்லது மேற்கண்ட 13 ஆவணங்களில் ஒன்றுடன் முதல் வேலையாக போய் ஓட்டுப் போட்டு விட்டு வந்து விடுங்கள்.
Source: தட்ஸ் தமிழ்
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...
